tamilnadu

img

இலவச தையல் பள்ளி துவக்கம்

திருவண்ணாமலை, செப்.12- திருவண்ணாமலை மாவட்ட தையல் கலை தொழிலாளர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில் ‘அன்னை லட்சுமி’  இலவச தையல் பள்ளி தொடங்கப்பட்டது.  திருவண்ணாமலை வேலை வாய்ப்புகள் குறைந்த மாவட்டமாகும். அதிலும் குறிப்பாக, பெண்க ளுக்கு வேலை வாய்ப்புகள் மிகக் குறைவே. சாப்ட்வேர் நிறுவனங்களோ, ஏற்றுமதி நிறுவங்களோ இல்லாத மாவட்டமாகும். இத்தகைய சூழலில், தையல் தொழில் மூலம் பெண்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்ப தில் சாத்தியம் உள்ளது. அதேநேரத்தில், இலவச மாக தையல் கற்பது பெண்  களுக்கு மிக அரிதான விஷய மாக இருந்துவருகிறது. இந்நிலையில், பெண்க ளுக்கு இலவசமாக தையல் பயிற்சி அளித்து, அதன் மூல மாக அவர்கள், வருமா னத்தை பெற்று வாழ்க்கை நடத்தும் நோக்கில் தையல்  பயிற்சிப் பள்ளி துவக்கப் பட்டுள்ளது. போளூர் சனிக்கைவாடி கிராமத்தில் நடைபெற்ற துவக்க விழாவிற்கு எஸ். நிஷா தலைமை தாங்கினார். வழக்கறிஞர் பி.ரஜினிகாந்த்  தையல் பயிற்சிப் பள்ளியை தொடக்கி வைத்தார். திரு வண்ணாமலை மாவட்ட  தையல் கலை தொழிலாளர் கள் சங்கத்தின் பொதுச் செய லாளர் எம். வீரபத்திரன், தலை வர் அ.மேரி, பொருளாளர் சி.எஸ். மணி, நிர்வாகிகள் சி. சம்பங்கி, இ.இந்து, எஸ்.கிரிஜா, ஆர்.சித்ராதேவி, எம்.ரோமி, சிபிஎம் மாவட்டச்  செயலாளர் எம். சிவக்குமார்,   தீண்டாமை ஒழிப்பு முன்னணி  பி. செல்வன்,  வழக்கறிஞர் எஸ். அபிராமன்,  சிஐடியு  நிர்  வாகிகள் இரா. பாரி, கே.காங்  கேயன், தண்டபாணி, ஆர்.  சிவாஜி, பி.சுந்தர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மதியழகன் நன்றி கூறினார்.