tamilnadu

லஞ்சம் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு விழா

திருவண்ணாமலை,நவ.5- திருவண்ணாமலை கமலாட்சி பாண்டுரங்கன் பார்மசி கல்லூரியில் இளைஞர் ரெட்கிராஸ், மாவட்ட ரெட்கிராஸ் சங்கம், மாவட்ட காவல்துறை ஊழல் தடுப்புப் பிரிவும் இணைந்து, லஞ்சம், ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரவிழா நடைபெற்றது. கல்லூரியின் துணைச் செயலாளர் என்.சாய்குமார் தலைமை தாங்கினார்.  கல்லூரி முதல்வர் ராஜலிங்கம் வரவேற்றார். மாவட்ட ரெட் கிராஸ் சங்கத் தலைவர் இந்திரராஜன், ஊழல் தடுப்புப் பிரிவு ஆய்வாளர் இரா.அருள்பிரசாத் கல்லூரி பிஆர்ஓ செந்தில்குமார் மாவட்ட ரெட்கிராஸ் நிர்வாகச் செயலாளர் அழகப்பன் பொருளாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்கள் பரிசளிக்கப்பட்டன.