tamilnadu

img

தொழிலாளர் விரோத முத்தரப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்க!

திருவண்ணாமலை, செப்.28- தொழிலாளர் விரோத முத்தரப்பு ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நலஅமைப்பின் மாநில மாநாடு வலியுறுத்தி யுள்ளது. 

தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நலஅமைப் பின் மாநில மாநாடு செப்டம் பர் 25, 26 ஆகிய இரண்டு நாட்கள் திருவண்ணாமலை யில் நடைபெற்றது. 

இம் மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு : மின்வாரியத் தில், உற்பத்தி, கொண்டு செல்லல், விநியோகம் ஆகிய மூன்றும் ஒரே நிர்வாகத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்ட நிலை யில், மின்வாரியத்தை மூன்றாக பிரிக்கும் உத்த ரவை எதிர்த்த வழக்கில் நீதி மன்றம் இடைக்கால தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே, நீதி மன்ற வழிகாட்டுதலை துச்ச மாக மதித்து, உரிமை பறிப்பு ஒப்பந்தத்தை அமலாக்க முயற்சிகள் மேற்கொள்வதை கைவிட்டு, தொழிற்சங்கங் கள் கூறும் கருத்துக்களை கணக்கில் கொண்டு ஒப்பந் தத்தை மாற்றி அமைக்க வேண்டும். 

மின்வாரிய ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்கள் மர ணத்திற்கு பிறகு, அவர்க ளது குடும்பத்தில் விதவை, விவாகரத்தான, திருமண மாகாத மற்றும் ஊனமுற்ற வாரிசுகளில் ஒருவருக்கு நிரந்தர வருமானம் இல்லாத நிலையில், அவர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங் கப்பட்டு பின்னர் நிறுத்தப் பட்டுள்ளது. எனவே அவர்க ளுக்கு வழங்கி வந்த ஓய்வூதி யத்தை மீண்டும் வழங்க வேண்டும். 

மின்வாரிய ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளன்று அவர்களுக்கு ஓய்வூதிய பலன் கள் கிடைக்க ஆவன செய்ய வேண்டும்.என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய நிர்வாகிகள்

மாநாட்டில் புதிய நிர்வாகி கள் தேர்வு செய்யப்பட்டனர். மாநிலத் தலைவராக எஸ். ஜெகதீசன், பொதுச் செயலா ளராக எஸ்.எஸ்.சுப்பிரமணி யன், பொருளாளராக ஆ. பழனி, மாநில துணைப் பொ துச் செயலாளர்களாக ஆர். ராமநாதன், எம்.பாலசுப்பிர மணி, வி.பிச்சைராஜன் மற்றும் 15 மாநிலத் துணை தலைவர்கள், 15 மாநிலச் செயலாளர்கள் தேர்வு செய் யப்பட்டனர்.