தாராபுரம், பிப். 2- தாராபுரத்தை அடுத்த மூலனூர் காவல் நிலையத் தில் பணியாற்றி வந்த பெண் காவலர் சனியன்று தற் கொலை செய்து கொண்டார். திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த மூல னூர் காவல் நிலையத்தில் பெண் காவலராகப் பணி யாற்றி வந்தவர் வள்ளியம்மாள் (31), இவரது கண வர் ராமசாமி (35). இத்தம்பதிக்கு திருமணமாகி 13 ஆண்டுகளாகக் குழந்தை இல்லாமல் தவித்தனர். இந்த நிலையில், கடந்த வெள்ளியன்று வள்ளியம் மாள் வீட்டில் தனியாக இருந்தபோது கண்வலிக்கி ழங்கு விதையை அரைத்துக் குடித்து மயக்கமடைந் தார். அப்போது அங்கிருந்த ராமசாமி வள்ளியம் மாளை தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச் சைக்காக அனுமதித்தார். பின்னர் மேல் சிகிச்சைக் காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்ட அவர் சனியன்று உயிரிழந்தார். இதுகு றித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தினர்.