tamilnadu

திருப்பூர் முக்கிய செய்திகள்

சமுதாயக் கூடத்திற்கு ஒதுக்கப்பட்ட இடம் ஆக்கிரமிப்பு அருந்ததியர் கூட்டமைப்பு எதிர்ப்பு

அவிநாசி, செப். 29- அவிநாசி பேருந்து நிலையம் அருகே சமுதாயக் கூடத்திற்கான இடத்தை ஆக்கிரமிப்பு செய்ததற்கு அருந்ததியர் கூட்டமைப்பினர் எதிர்ப்புத் தெரி வித்துள்ளனர். அவிநாசி பழைய பேருந்து நிலையம் பின்பு றப் பகுதியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக தினசரி சந்தை செயல்பட்டு வந்தது.  பழையபேருந்து நிலைய வணிக வளாகம் கட்டடம் இடித்துக்கட்டது. இந்நிலை யில் அங்கு செயல்பட்டு வந்த தினசரி சந்தை, புதிய பேருந்து நிலையத்தின் பின்புறம் மாற்றப் பட்டது. இருப்பினும் வியாபாரிகள் அருகில் உள்ள அருந்ததியர் சமுதாயக் கூட இடத்தில் காய்கறி வியாபாரம் செய்து வந்தனர். இதையறிந்த அருந்த தியர் கூட்டமைப்பினர், அனைத்துக் கட்சியினருடன் அப்பகுதியில் திரண்டு எதிர்ப்புத் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட னர். இதில் சமதாயக்கூட இடத்தில் கடைகள் அமைக்கமாட்டோம் என வியாபாரிகள் உறுதிய ளித்தனர். இதையடுத்து அருந்ததியர் கூட்டமைப்பி னரும், அனைத்துக்கட்சியினரும் கலைந்து சென்றனர்.

கள்ள நோட்டுகளுடன் வட மாநில இளைஞர் கைது

திருப்பூர், செப். 29- திருப்பூரில் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற வட மாநில இளைஞர் கைது செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்டம்,  தென்னம்பாளையம் பகுதி யைச் சேர்ந்த மனோஜ் செல்போன் கடை வைத் துள்ளார். ஆன்லைன் மூலம் பணபரிமாற்றமும் செய்து வந்தார். கடந்த வெள்ளியன்று இரவு அங்கு வந்த வடமாநில இளைஞர் ஒருவர் தனது தந்தையின் வங்கி கணக்குக்கு ரூ.14 ஆயிரம் அனுப்ப வேண்டும் என போலி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 7-ஐ கொடுத்து உள்ளார். அவர் கொடுத்தது கள்ள நோட் டுகள் என்பதையறிந்த மனோஜ், காவல் துறையின ருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் விசாரணை நடத்தியதில் வட மாநில இளைஞர் கொண்டு வந்த ரூபாய் நோட்டுகள் ஜெராக்ஸ் செய்யப்பட்டவை என தெரிய வந்தது.  இதையடுத்து பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்த அந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.