tamilnadu

திருப்பூர் தொடர் வகுப்பு நாளை நிறைவு கே.பாலகிருஷ்ணன் உரையாற்றுகிறார்

திருப்பூர், டிச. 1- இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூறு ஆண்டுகள் என்ற தலைப்பில் திருப்பூரில் நடைபெற்று வரும் தொடர் வகுப்பு செவ்வாய்க்கிழமை நிறைவடைகிறது. இதில் நாம் வெல்வோம் என்ற தலைப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உரையாற்றுகிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழு பத்தாம் ஆண்டாக காலை நேர தொடர் வகுப்பை நடத்தி வருகிறது. இதன் பத்தாம் நாள் வகுப்பு செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணிக்கு நடைபெறும். இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றுகிறார். இதில் அனைத்து தரப்பினரும் பங்கேற்க வருமாறு மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் கேட்டுக் கொண்டார்.