அவிநாசி ஜூன்.11 அவிநாசி சாலையில் லாரி ஒன்றின் பின்புற டயர் வெடித்ததால் நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள் ளானது. திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அருகே உள்ள தெக்கலூரிலிருந்து கட்டிட சென்ட்ரிங் பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று பெருமாநல்லூர் நோக்கி கோவை - சேலம் ஆறுவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது. இதில் ஓட்டுநர் உட்பட 5 பேர் பயணம் செய்துகொண்டிருந்தனர். இந்நிலை யில், சாலையில் சென்று கொண்டிருந்தபோது லாரி யின் பின்புற டயர் திடீரென வெடித்தது. இதனால் நிலைதடுமாறி லாரி சாலையிலேயே கவிழ்ந்து விபத் துக்குள்ளானது. இதில் லாரியில் பயணம் செய்த 5 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர்கள் ஐவரும் அவிநாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும், லாரி கவிழ்ந்ததில் சுமார் 4 டன் எடை யுள்ள இரும்பு பைப்புகள் சாலை முழுவதும் கொட்டிக் கிடந்தது. இதனால் கோவை - சேலம் ஆறுவழிச்சா லையில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதித் தது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரும்பு பைப் புகளை அப்புறப்படுத்தி, விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.