tamilnadu

img

மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் கை சுத்திகரிப்பு திரவம், முக கவசம் விற்பனை

திருப்பூர், மார்ச் 24– திருப்பூரில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் கை சுத்திகரிப்பு திரவம் தயாரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுவதுடன், பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்ணுயிர்க் கிருமிகளைத் தடுக்கும் வகையிலான மூன்றடுக்கு முக கவசங்கள் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த சுத்திகரிப்பான், முக கவசங்களை நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அலுவலகங்களில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பி னர்கள் மூலம் பொது மக்களுக்கு விற்பனை செய்யப் படுகிறது என்று மாவட்ட ஆட்சியரக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.