திருப்பூர், ஆக.29- கிராம ஊராட்சியில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து பணி ஓய்வு பெற்று 14 மாதமாக ஓய்வூதி யம், இதர பலன்கள் தராத அரசு நிர்வாகத்தைக் கண்டித்து சிஐடியு ஊரக உள்ளாட்சித் துறை ஊழியர் கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடுமலை ஒன்றியம், புங்கமுத் தூரைச் சேர்ந்தவர் பெரிய காளி முத்து, மடத்துக்குளம் ஒன்றியம் கடத்தூர் ஊராட்சியைச் சேர்ந்தவர் கண்ணையன். இவர்கள் இருவரும் தூய்மைப் பணியாளர்களாக வேலை செய்து கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி பணி ஓய்வு பெற்றனர்.
ஆனால் அவர்க ளுக்குத் தர வேண்டிய மாதாந்திர ஓய்வூதியம் தலா ரூ.2 ஆயிரம் மற் றும் தலா ரூ.50 ஆயிரம் பணப் பலன் ஆகியவற்றை ஊராட்சி ஒன்றிய நிர்வாகங்கள் இதுவரை தராமல் உள்ளது. இந்நிலையில் பணி ஓய்வு பெற்று 14 மாதங்களாகியும் இவர்க ளுக்குத் தர வேண்டிய தலா ரூ.78 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1.56 லட் சத்தை உடனடியாக பட்டுவாடா செய்ய வலியுறுத்தி சிஐடியு ஊரக உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத் தின் சார்பில் உடுமலைபேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கப் பொருளாளர் தண்டபாணி தலைமை வகித்தார். சிஐடியு மாவட் டச் செயலாளர் கே.ரங்கராஜ், மாவட்டத் துணைச் செயலாளர் ஜெகதீஷன், கட்டுமான சங்கத் தலைவர் கி.கனகராஜ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரை யாற்றினர். ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன், சுப்பிரமணியம் உள்பட சுமார் 70க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து உடுமலை கோட்டாட்சி யர் அலுவலகத்தில் மேற்படி கோரிக் கைகளை வருவாய்த் துறை உடன டியாக நிறைவேற்ற வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.