திருப்பூர், மார்ச் 1 - இந்திய மக்களை மதஅடிப்படை யில் பிளவுபடுத்தும் குடியுரிமைத் திருத்தச் சட்டம், என்பிஆர், என்ஆர்சி ஆகியவற்றுக்கு எதிராக இளைய தலைமுறையினர் வரலாறு படைப்ப வர்களாக போராடி வருகின்றனர் என்று எழுத்தாளர் அன்வர் உசேன் கூறினார். திருப்பூர் கே.ஆர்.சி. சிட்டி சென்ட ரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் அறிதல் அரங்கம் நிகழ்வு சனியன்று நடை பெற்றது. இதில் பங்கேற்று குடியு ரிமைத் திருத்தச் சட்டம் குறித்து எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர் திருச்சி அன்வர் உசேன் கூறியதாவது: குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்ததில் மத்திய ஆட்சி யாளர்களுக்கு நீண்ட கால நோக்க மும், உடனடி நோக்கமும் உண்டு. இந்துத்துவா என்ற கருத்தை 1922ஆம் ஆண்டு சாவர்க்கர் முதன் முறையாக முன்வைத்தார். 1925ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் அமைப்பு உருவானது. 2022ஆம் ஆண்டு இந்துத்துவா கருத்து உருவானதின் நூற்றாண்டு ஆகும், அதேபோல் 2025ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு ஆகும். எனவே 2022, 2025ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை இந்துராஷ்டிர தேசமாக அமைப்போம் என்று ஆர்எஸ்எஸ்காரர்கள் கூறி வருகின்றனர். இது அவர்களது நீண்ட கால நோக்கம். மோடி ஆட்சி இரண் டாவது முறையாக வெற்றி பெற்ற தன் மூலம் இதை நிறைவேற்றுவதற்கு அருமையான வாய்ப்பு கிடைத்துள் ளதாக அவர்கள் கருதுகின்றனர். அதேசமயம் அஸ்ஸாமில் என் ஆர்சி எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்பட்டதில் முத லில் 44 லட்சம் பேர் குடியுரிமை அற்றவர்களாக கணக்கிடப்பட்டார் கள். மீண்டும் பரிசீலித்து மாற்றிய பிறகு 19 லட்சம் பேர் இப்போது குடி யுரிமை அற்றவர்களாக அறிவிக்கப் பட்டுள்ளனர். இதில் இஸ்லாமியர்கள் 6 லட்சம் பேர்தான். ஆனால் இந்துக் கள் 12 லட்சத்துக்கும் மேற்பட்டவர் கள் உள்ளனர். இது அஸ்ஸாமில் உள்ள பாரதிய ஜனதா ஆட்சியாளர் களுக்கு மிகப்பெரும் பிரச்சனையாக உருவெடுத்தது. இதை சரிக்கட்டுவ தற்காகத்தான் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்து அதில் 2014ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு அங்கு குடியுரிமை இழந்த இந்துக்களுக்கும் குடியுரிமை வழங்கப் பார்க்கின்றனர். இதுதான் உடனடி காரணம். எனினும் அஸ்ஸாமில் ஏற்கெனவே போடப்பட்ட ஒப்பந்த அடிப்படையில் 1971ஆம் ஆண்டுக்கு பின் அங்கு வந்தோருக்கு குடியுரிமை தரக்கூடாது என்ற அடிப்படையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டம், என்பிஆர், என்ஆர்சி ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் இளைய தலைமுறையினர் எழுச்சியோடு போராட்டத்தில் குதித்துள்ளனர். இதை பாஜக ஆட்சியாளர்கள் எதிர்பார்க்கவில்லை. மக்கள்தொகை கணக்கெடுக் கெடுப்பிற்கும், தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கும் அடிப்படையான வேறுபாடு உண்டு. மக்கள்தொகை கணக்கெடுப்புப் புள்ளிவிபரங்களில் உள்ள விபரங்களை யாருக்கும் வெளிப் படுத்தக் கூடாது என்ற சட்டரீதியான தடை உள்ளது. அதேசமயம் தேசிய மக்கள்தொகை பதிவேடு மூலம் அனை வரது விபரங்களையும் அரசு தொகுக் கப்பதன் மூலம் அடுத்த கட்டமாக என்ஆர்சி எனப்படும் குடிமக்கள் பதி வேட்டிற்கான விபரங்களை சேகரிக் கப்படும். 2000ஆவது ஆண்டு பிறந்தவர் களிலேயே ஏறத்தாழ 48 சதவிகிதம் பேருக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லா தபோது, குடியுரிமையை நிரூபிக்க எப்படி அனைவரும் பிறப்புச் சான் றைக் காட்ட முடியும். மேலும் இந்தி யாவில் 11 கோடிப் பேர் நாடோடி களாக வாழ்ந்து வருகின்றனர் எனக் கணக்கெடுப்பு சொல்கிறது. அவர்கள் எந்த ஆவணமும் இல்லாதவர்கள். அவர்களது குடியுரிமை எப்படித் தீர்மானிக்கப்படும். குடியுரிமை அற்றவர்களை அகதி களாக திறந்தவெளி சிறைச்சாலை களிலும், முகாம்களிலும் அடைப் பார்கள். இப்போது அதுபோல் எங்கும் முகாம்கள் அமைக்கப்படவில்லை என்று மோடி சொல்கிறார். ஆனால் அஸ்ஸாமில் முகாம் கட்டப்பட்டுள் ளது. கர்நாடகத்தில் முகாம் கட்டப் பட்டு வருகிறது. மகாராஷ்டிரத்தில் முந்தைய பட்னாவிஸ் அரசு முகாம் அமைக்க உத்தரவு பிறப்பித்திருந்தது, அதை தற்போதுள்ள சிவசேனா அரசு ரத்து செய்துவிட்டது. குடிமக்கள் பதிவேடு என்பது ஒவ்வொருவரின் குடியுரிமையும் நிரூபிக்கும்படி சொல்கிறது. அதற்கு ஒரு அதிகாரிக்கு அதிகாரம் தரப்படு கிறது. அவர் விருப்பு வெறுப்பு அடிப்ப டையில் யாரை வேண்டுமானாலும் டி என சந்தேகத்திற்கு உரியவராக மாற்ற முடியும். இந்த பதிவேட்டு நடைமுறை என்பது, ஒரு ஊரில் வங்கிக் கொள்ளை நடைபெற்றால், திருடர்களைக் கண்டு பிடிக்க வேண்டியது காவல் துறை பணி. ஆனால் ஊரில் உள்ள அனை வரும் நான் வங்கியில் கொள்ளைய டிக்கவில்லை என ஒவ்வொருவராக வந்து நிரூபிக்கும்படி உத்தரவு பிறப் பிப்பது போன்றதாகும். அதேசமயம் இந்திய வரலாற்றில் மன்னர்கள் ஆட்சி நடைபெற்ற மத்திய காலத்தில் இருந்து இந்து முஸ்லிம் இருதரப்பினருக்குமிடையே ஒருபக்கம் பிரச்சனை இருந்தாலும், இருதரப்பு ஒற்றுமை என்பதும் வலு வாக இருந்து வருகிறது. 1857ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் இந்திய சுதந்திரப் போராட்டம் இந்து - முஸ் லிம் ஒற்றுமைக்கு பொற்காலம் என்று சொல்லப்படுகிறது. அந்த ஒற்றுமை யைக் கண்டு பிரிட்டிஷ் ஆட்சியாளர் களே திகைத்து நின்றனர். அதேபோல் இப்போதும் இந்த நாட்டில் இந்து - முஸ்லிம் ஒற்றுமை தான் இந்த சட்டத்தைப் பின்வாங் கச் செய்யும். இதுதான் ஆட்சியாளர் களுக்கு மிகப்பெரும் நெருக்கடியாக உள்ளது. சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி ஆகியவற்றைப் பற்றி அறியாமல் இருக்கும் வெகுமக்களிடம் இதன் ஆபத்துகளை விளக்கிட வேண்டும். இந்த சட்டத்தை எதிர்த்துப் போராடி வரும் இளைய தலைமுறையினர் வர லாறு படைப்பவர்களாக உள்ளனர். இவ்வாறு அன்வர் உசேன் கூறினார். முன்னதாக இந்த அறிதல் அரங் கத்திற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்டத் தலைவர் பி.ஆர்.கணேசன் தலைமை ஏற்றார். மாநிலக்குழு உறுப் பினர் கோவை சதாசிவம் உரையாற்றி னார். மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.ஈஸ்வரன் உள்பட ஏராளமானோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.