திருநெல்வேலி, ஆக.11- இந்தியாவை பாதுகாப்போம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி ஒன்றியத்தில் சிஐடியு, மாதர் சங்கம், வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டங் கள் நடைபெற்றன. நெல்லை மாவட்டம் சேரை ஒன்றி யம் புதுக்குடி சௌராஷ்டிரா கீழத்தெரு வில் இந்தியாவை பாதுகாப்போம். இந்திய மக்களை பாதுகாப்போம் இயக்கம் அபிராமி தலைமையில் நடை பெற்றது,சேரை ஒன்றியம் புதுக்குடி நடுத்தெருவில் மாலா தலைமையிலும் சேரை ஒன்றியம் தெற்கு வீரை பைபாஸ் பாரதிநகரில் வெங்கட்ராமன் தலைமை யிலும் வீரவநல்லூர் ரெங்கநாத சாமி கோவில் தெரு கிளை சார்பாக உல கம்மாள் தலைமையிலும் சேரை ஒன்றி யம் தெற்கு வீரை பெரியார்நகரில் மல்லிகா தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வீரவநல்லூரில் சலவை தொழிலா ளர் சங்கம் சார்பாக சாந்தி தலைமை யிலும், வீரவநல்லூர் நயினார் காலனி கிளை சார்பாக ஆனந்தி தலைமை யிலும் வீரவநல்லூர் கிளாக்குளம் கீழத்தெருவில் ரேவதி தலைமை யிலும், வீரை பாரதிநகரில் ஜெயந்தி தலைமையிலும் வீரவநல்லூர் கிளாக் குளம் மாதாங்கோவில் தெருவில் உஷா தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பத்தமடையில் பல இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் நாகூர் , ராஜன், பக்கீர்மைதீன் கலந்து கொண்ட னர். ஒன்றிய செயலாளர் கோமதிநாய கம் கலந்து கொண்டார். பத்தமடையில் திருவள்ளுவர் நகரில் இரண்டு இடங்களில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. சங்கரன் கோவிலில் லெட்சுமி தலைமையிலும் வெள்ளங் குளியில் மாதர், வாலிபர், வி.ச. சார்பி லும் கல்லிடைக்குறிச்சியில் மூன்று இடங்களில்ராமர்கனி, சுகுணா, ஜேக்கு லின் ஆகியோர் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேரை ஒன்றியத்தில் வீரவநல்லூர், புதுக்குடி, காரை, சேரை, பத்தமடை பகு திகளில் 25 மையங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் கற்பகம், கோமதி நாயகம், முத்துகிருஷ்ணன், ரவி, பக்கீர்மைதீன், ராஜன், மல்லிகா, நாகூர், முத்துசெல்வி, உலகம்மாள், ஜெயந்தி, வெள்ளபாண்டி, நாகையன், செல்வசுந்தரி, சுடலை, காளசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தென்காசி
தென்காசி மார்க்கெட் அருகில் பீடி தொழிலாளர் சங்கத்தின்(சிஐடியு) தாலுகா செயலாளர் குருசாமி தலை மையிலும் தென்காசி புதிய பஸ் ஸ்டாண்ட் முன்பு ஆட்டோ சங்க ரவிச்சந்திரன் தலைமையிலும் தென்காசி வீட்டுவசதி வாரிய குடி யிருப்பு முன்பு மாதர்சங்க தலைவர் பேரா. சங்கரி தலைமையிலும் தென்காசி மவுண்ட்ரோடு விடிஎஸ்ஆர் மேல்புறத்தில் பீடி சங்க வட்டார துணைதலைவர் தோழர் கருப்பையா தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . இந்த ஆர்ப்பாட்டங்க ளில் சி.ஐ.டி.யு மாவட்ட தலைவர் எம். வேல்முருகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.