திருநெல்வேலி, மார்ச் 27-நெல்லை மாநகரில் வீட்டிற்கே சென்று மளிகைப் பொருள்களை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது-நெல்லை கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக ஒவ்வொரு நாளும் நெல்லை மாநகராட்சி துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் பல்பொருள் அங்காடிகளில் ஒன்றாகக் கூடுவதைத் தவிர்க்கும் விதமாக வீட்டில் இருந்து கொண்டே செல்போன், தொலைபேசி வாயிலாகவே அனுமதிக்கப்பட்ட அங்காடிகளில் அத்தியாவசியப் பொருள்களை கேட்டு உரிய விலையில் பெற்றுக்கொள்ளலாம்.
நெல்லை மாநகரில் ஏஏபி நாடார் ஸ்டோர்ஸ் (7598253030, 7598223030, 7598423030), போத்தீஸ் சூப்பா் மார்க்கெட் (9047023632, 9047023631, 0462-2332133)பிக் பஜார் (9566912507, 7010124207, 8088420081, 9367103528), ரிலையன்ஸ் ரீடெய்ல் ஷாப் (8072036055, 7358022208, 8668094723, 6381751192), பாலன் சூப்பா் மார்க்கெட் (9865014947, 9442257685, 9865219873, 0462-2572555, 0462-2577555, 8754028080, 7373058730) நாச்சியார் சூப்பா் மார்க்கெட் (9488184444, 9488184333, 0462-2584444, 0462-2584333)ஆகியவற்றை பொதுமக்கள் தொடா்பு கொண்டு காலை 9 மணி முதல் மாலை 4 மணி ஆா்டா் செய்யலாம். ஆா்டா் செய்த மறுநாள் பொருள்களை உரிய விலையில் பெற்றுக்கொள்ளலாம். மூத்த குடிமக்கள் வசிக்கும் இல்லங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். டெலிவரி கட்டணமாக ரூ.25 மட்டும் வசூலிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.