திருநெல்வேலி, ஆக.22- ஊரடங்கு காலத்தில் வரு மானவரி செலுத்தும் வரம்பு க்குள் வராத அனைவருக்கும் ரூ.7500 வழங்கிடவும், ரேசன் கடைகள் மூலம் அடுத்து வரும் ஆறு மாத காலங்க ளுக்கு ஒருநபருக்கு 10 கிலோ உணவு தானியம் வழங்கிடவும். மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடை பெற்றது. கட்சியின் வீரவநல்லூர் பாரதிநகர் கிளை, சேரை ஒன்றியம் வீரை 2 வது வார்டு பெண்கள் கிளை சார்பாக வீரை 10-வது வார்டில் உள்ள இளைஞர்கள் சார்பாக பிரச்சாரம் நடை பெற்றது. சேரை ஒன்றியம் கல்லிடை பெண்கள் கிளை சார்பாக ஆய்வும் நடை பெற்றது. சேரை ஒன்றியம் கொழுமடை பகுதியில் மாலதி தலைமையில் பிரச் சார இயக்கம் நடைபெற்றது. மேற்கண்ட இயக்கங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கற்பகம் கலந்து கொண்டார்.