திருநெல்வேலி, மே 18- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்க ளில் ஒருவரும் அரசியல் தலைமைக் குழுவின் முன்னாள் உறுப்பினருமான தோழர் கே.வரதராசன் சனிக்கிழமை மாலை கரூரில் உடல்நலக்கு றைவால் காலமானார். அவ ருக்கு நெல்லை ரெட்டியா ர்பட்டி சிபிஎம் மாவட்ட குழு அலுவலகத்தில் ஞாயிற்றுக்கி ழமை இரங்கல் கூட்டம் நடை பெற்றது. மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் தலைமை வகித்தார். சிஐடியு அகில இந்திய செயலாளர் ஆர்.கருமலையான், சிபிஎம் மா வட்ட செயற்குழு உறுப்பி னர்கள் வீ.பழனி, பி.ஜெயராஜ், ஆர்.மோகன், சுடலைராஜ், ஸ்ரீராம், ராஜ குரு மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் வரகுணன், பெருமாள் உள்ளிட்டோர் மறைந்த கே.வரதராசன் பட த்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.