தஞ்சாவூர், ஜன.31- மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), தேசிய மக்கள் தொகை பதி வேடு (என்பிஆர்) ஆகியவற்றிற்கு எதிராக எஸ்டிபிஐ சார்பில் பெண்கள் மாநாடு அதி ராம்பட்டினம் ஜாவியா அருகில் வியா ழக்கிழமை நடைபெற்றது. மாநாட்டிற்கு, எஸ்டிபிஐ தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் என்.முகமது புஹாரி தலைமை வகித்தார். அக்கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் எம்.நிஜாம் முகைதீன், ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில செயற்குழு உறுப்பினர் மவ்லவி. ஹாபிஸ் எம்.ஏ சௌகத் அலி உஸ்மானி, நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் அமைப்பின் மாநில செயலாளர் எம்.தஸ்லீமா, எஸ்.டி.பி.ஐ கட்சி மாநிலச் செயலாளர் என். சஃபியா ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினர். முன்னதாக, அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ். அகமது அஸ்லம் வரவேற்றார். அதிராம் பட்டினம் பேரூர் தலைவர் என்.எம்.எஸ் ஷாஃபிர் அகமது நன்றி கூறினார்.