திருச்சிராப்பள்ளி, செப்.19- ரெயில்வேயை சீரழிக்கும் 100 நாள் செயல் திட்டம், பொன்மலை, பெரம்பூர் கேரேஜ், லோகோ உள்ளிட்ட 44 ரயில்வே ஒர்க் ஷாப்புகள், ஐ.சி.எப் உள்ளிட்ட 7 ரயில்வே உற்பத்தி தொழிற் சாலைகளை ரோலிங் ஸ்டாக் கம்பெனி யாக மாற்றும் திட்டம், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய மறுக்கும் மத்திய அரசின் போக்கை கண்டித்து தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனி யன் பொன்மலை கிளைகள் சார்பில் புதனன்று பொன்மலை ஆர்மரிகேட் அருகில் தர்ணா போராட்டம் நடை பெற்றது. போராட்டத்திற்கு ஒர்க் ஷாப் டிவி சன் கோட்ட தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார். போராட்டத்தில் டிஆர்இயு செயல் தலைவர் ஜானகி ராமன், இந்திய ரயில்வே ஊழியர் கூட்ட மைப்பு தலைவர் மனோஜ்பாண்டே, இணை செயலாளர் சஞ்சய்திவாரி ஆகி யோர் சிறப்புரையாற்றினர். டிஆர்இயு பொதுச்செயலாளர் மனோகரன், சந்தான செல்வம், டிவிசன் நிர்வாகி கள் லெனின், சங்கர், ஜெகநாதன், கருப்புசாமி கிளை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.