tamilnadu

திருச்சிராப்பள்ளி முக்கிய செய்திகள்

உய்யகொண்டான் ஆற்றை சாக்கடையாக மாற்றிய  திருச்சி மாநகராட்சி நிர்வாகம்  

திருச்சிராப்பள்ளி, ஜூன் 24- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு பகுதி செய லாளர் வெற்றிசெல்வன், திருச்சி ஆட்சியரிடம் அளித்த மனு வில், திருச்சி மாநகராட்சியின் பிரதமான ஓடிக்கொண்டிருந்த உய்யகொண்டான் ஆறு, மாநகரத்தின் பல்வேறு பகுதி வழி யாக சென்று பல இடங்களில் விவசாய நிலங்களுக்கு செல்லும் ஆறு இன்று சாக்கடையாகவே மாறி உள்ளது.  குழுமாயி அம்மன் ஆறுகண்ணிலிருந்து மாநகராட்சி எல்லை முடியும் வரை அனைத்து இடங்களிலும் வீட்டு சாக்கடையை பாதாள சாக்கடையில் விடாமல் நேரடியாக ஆற்றில் விடுவது, மேலும் ஐயப்பன் கோவில், ஆழ்வார் தோப்பு, பாலக்கரை எடத்தெரு என பல இடங்களில் சாக்கடை நீர் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக ஆற்றில் கலக்கும் நிலை உள்ளது. மேலும் இறைச்சி கழிவுகள், தாவர கழிவுகள், கட்டு மான பொருட்களையும் கொட்டும் நிலை உள்ளது. இத னால் விவசாயம் பாழடையும் நிலை உள்ளது. குறிப்பாக சாக்கடையோடு ரசாயன பொருட்கள் கலப்பது என தொடர் கதையாகி, ஒட்டுமொத்தமாக மாநகராட்சி உய்ய கொண்டான் ஆற்றை சாக்கடையாக மாற்றி பாழடைய செய்துள்ளதை தாங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம். இதன்மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டு கிறோம் என அதில் கூறப்பட்டுள்ளது.

பொறியியல் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு குறைந்ததாக  பரவும் தகவல் உண்மையில்லை 

கல்லூரிகளின் கூட்டமைப்பினர் பேட்டி 
திருச்சிராப்பள்ளி, ஜூன் 24- தமிழ்நாடு சுயநிதி பொறியியல் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் கூட்டமைப்பு அரசு தொழில்நுட்ப கல்வி இயக்கம் விரைவில் நடத்த உள்ள ஆன்லைன் கவுன்சிலிங் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு தொலைநோக்கு 2019 என்ற பெயரில் திருச்சியில் திங்களன்று நடைபெற்றது. கருத்த ரங்கிற்கு தமிழ்நாடு சுயநிதி பொறியியல் கல்லூரி மற்றும் அறி வியல் கல்லூரிகளின் கூட்டமைப்பு தலைவர் முனிரத்தினம் தலைமை வகித்தார். சங்க செயலாளர் டாக்டர் சிவானி செல்வ ராஜ் முன்னிலை வகித்தார். ஐசிடி அகடாமியின் துணைத்தலைவர் அன்புதம்பி, ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு ஜி.பி.எஸ் நிறுவனத்தின் ராஜகோபா லன், கே.7 கம்ப்யூட்டிங் நிறுவனத்தின் முதன்மை செயலாளர் புருஷோத்தமன், அரசு தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் மூத்த அதிகாரிகள் உள்பட பலர் பேசினர். பின்னர் கூட்டமைப்பு தலைவர் முனிரத்தினம், சங்க செய லாளர் டாக்டர் சிவானி செல்வராஜ் ஆகியோர் நிருபர்களுக்கு கூறியதாவது: பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு குறைந்து விட்டதாக ஒரு பரவலான தகவல் நிலவி வருகிறது. ஆனால் உண்மையில் 2017-18 ம் ஆண்டில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பொறியியல் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த ஆண்டு, கடந்தாண்டை விட 1 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த சத வீதம் வரும் கல்வியாண்டிலும் தொடரும் என எதிர்ப்பார்க்கி றோம். பொறியியல் படிப்பில் வேலைவாய்ப்பு பிரச்சனை படிப்பிலோ அல்லது பாடத் திட்டத்திலோ இல்லை. மாண வர்கள், பொறியியல் பட்டப் படிப்போடு அந்த துறை சார்ந்த புதிய தொழில்நுட்பங்கள், அயல்நாட்டு மொழிகள், மென் பொருட்கள் போன்றவற்றை கற்றுக் கொண்டாலே வேலை வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும் என்றனர்.