tamilnadu

சீர்காழி ,திருச்சிராப்பள்ளி முக்கிய செய்திகள்

பல ஆண்டாக கிடப்பில் உள்ள  தடுப்புச் சுவர் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை 

சீர்காழி ஜூலை 19- கொள்ளிடம் ஆற்றுப் பகுதி தடுப்புச் சுவர் கட்டும் பணிக்கு அளவீடு செய்வ தற்கு ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்வதாக வெளியான அரசின் அறிவிப்பு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். நாகை மாவட்டம் கொள்ளிடம் ஆற் றில் திருக்கழிப்பாலை என்ற இடத்தில் கடல் நீர் உள் புகாமல் இருப்பதை தடுக்கும் விதத்தில் நில அளவீடு செய்ய வும் மண் மாதிரி செய்யவும் ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழக முதல்வர் சட்டமன்ற கூட்டத்தில் அறி வித்தார். இது குறித்து கொள்ளிடம் வட்டார விவசாய சங்கங்களின் கூட்ட மைப்பு செயலாளர் வெட்டாத்தாங் கரை விஸ்வநாதன் கூறியதாவது: கொள்ளிடம் ஆற்றில் கடல் நீர் 15 கிமீ தூரத்துக்கும் அப்பால் புகுந்  துள்ளதால் ஆற்றின் கரையை யொட்டியுள்ள கிராமங்களில் நிலத் தடி நீர் உவர் நீராக மாறி விட்டது. இதனால் குடிநீர் தட்டுப்பாடும் ஏற் பட்டுள்ளது. சுமார் 3000-க்கும் மேற் பட்ட விளை நிலங்கள் உவர் நிலங்க ளாக மாறி தரிசாக கிடக்கின்றன. கடந்த 10 ஆண்டுகளில் கடல் நீர் தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றுக்குள் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு பொதுப் பணித் துறை மற்றும் வருவாய்த் துறை அடங்கிய அதிகாரிகள் குழுவினர் கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதி யை பார்வையிட்டு சந்தப்படுகைக் கும் பெராம்பட்டுக்கும் இடையே கடல் நீர் உள் புகாதவாறு தடுப்பணை கட்டப் படும் என்றும், அந்த இடத்தையே தடுப் பணை கட்டுவதற்கு ஏற்ற இடம் என்றும் தேர்வு செய்து அறிவித்தனர். இதற்காக ரூ.116 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு தடுப்பணை கட்டும் பணி விரைவில் துவங்கும் என்றும் விவசாயிகளிடம் தெரிவித்தனர்.

பின்னர் தடுப்பணை கட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனைத் தொடர்ந்து கடந்த 2016-ம் ஆண்டு மேற்குறிப்பட்ட சந்தப்படுகை- பெராம்பட்டு இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப் போவதாகவும் அதற்கான பணி விரை வில் துவங்கும் என்றும் அறிவித்தனர். பொதுப்பணித்துறை உயரதிகாரிகள் மற்றும் வருவாய்துறை உயரதிகாரி கள் உரிய இடத்தை பலமுறை பார்வை யிட்டு ஆய்வு செய்தனர்.  பின்னர் 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் பொதுப்பணித் துறை உயரதிகாரிகள் குழுவினர் கொள்ளிடத்தில் கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களைச் சேர்ந்த விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் 500-க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்ட கூட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கத வணை கட்டப்படும் என்றும் இதனால் கடல் நீர் ஆற்றுக்குள் புகுவது தடுக்கப் படும். மேலும் ஆற்றில் மழைக் காலங் களில் அதிக நீர் வரத்தின் போது உபரி நீரை கதவணைகளை திறந்து வெளி யேற்றும் வகையிலும் வழிவகை செய் யப்படும் என்றும் தெரிவித்தனர்.  அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட மயிலாடுதுறை காவிரி வடி நிலக் கோட்ட செயற்பொறியாளர் இக் பால் என்பவர் விவசாயிகளிடம் கூறு கையில், தடுப்பணை கட்டும் இடம் தேர்வு செய்யப்பட்டு விட்டதாகவும் சந்தப்படுகை பெராம்பட்டு இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 2016-ம் ஆண்டிற்கு உள்ளாகவே கதவணை கட்டும் பணி துவங்கும் என்றும் அறி வித்தார். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். 

கதவணை கட்டும் பணி விரைவில் துவங்கும் என்றும் ஆவலுடன் எதிர் பார்த்தனர். ஆனால் அதற்கான எந்த நட வடிக்கையும் இதுவரை எடுக்க வில்லை. இந்நிலையில் சட்டமன்றத் தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழ னிச்சாமி பேசும்போது, கொள்ளிடம் ஆற்றில் கடல் நீர் உள் புகுவதை தடுக் கும் வகையில் தடுப்புச் சுவர் அமைக்க நில அளவீடு செய்யவும் மண் மாதிரி செய்யவும் ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவித்தார். கடந்த 2014-ம் ஆண்டு முதல் இது வரை 5 ஆண்டுகளாக கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டப் போவதாக அதிகாரிகள் வெறும் ஆய்வு பணியை மட்டுமே மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் செயல்படுத்துவதற்கான நட வடிக்கை இல்லை. எனவே அரசு கொள் ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டினால் மட்டுமே தட்டுப்பாடு இல்லா மல் குடிநீர் கிடைக்கவும் விவசாயம்  நிலங்களை பாதுகாக்கவும் முடியும். அதற்கான ஆயத்தப் பணிகளை அரசு போர்க்கால அடிப்படையில் நிறை வேற்ற வேண்டும் என்றார். 

திருச்சியில்மணல் மாட்டு வண்டி ரீச் கோரி ஆட்சியரகம் முன்பு போராட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 19- திருச்சி மாவட்ட மணல் மாட்டு வண்டி சங்க மாவட்ட தலை வர் ஜி.கே.ராமர் கூறுகையில், திருச்சி மாவட்டத்தில் 5 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் நீண்ட காலமாக காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்று பகுதி களில் மணல் எடுத்து தொழில் செய்து வருகின்றனர்.  இந்நிலையில் மண்ணச்சநல்லூர் தாலுகா மாதவபெரு மாள் பஞ்சாயத்தில் செயல்பட்டு வந்த மணல் மாட்டு வண்டி ரீச் கடந்த பிப்ரவரி 10-ம் தேதி மூடப்பட்டது. இதனால் ஆயி ரக்கணக்கான மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் கடந்த பல மாதங்களாக வாழ்வாதாரம் இழந்து பெரிதும் பாதிக்கப் பட்டனர். இதனை தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்கள், பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. பின்னர் ஆட்சியர் சிவ ராசு உத்தரவின் பேரில் ஜூன் 10-ம் தேதி திருவெறும்பூர் தாலுகா கீழமுல்லக்குடியில் மணல் மாட்டு வண்டி ரீச் திறக்கப்பட்டது.  மாட்டு வண்டிகளில் மூலம் பொதுமக்களுக்கு மணல் கிடைத்ததால் திருட்டு மணல் விற்றுவந்தவர்கள் பாதிக்கப்பட்ட னர். இதனால் மணல் திருட்டில் ஈடுபட்டு வந்தவர்களும், சமூக விரோதிகளும் மணல் மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தனர். மணல் மாட்டு வண்டி ரீச்சை மூடுவதற்கு பல்வேறு வகையில் முயன்று வந்தனர். இதுகுறித்து மணல் மாட்டு வண்டி சங்கம் சார்பில் ஆட்சியர் சிவராசுவிடம் கடந்த ஜூன் 17-ம் தேதி புகார் மனு அளிக்கப்பட் டது. மேலும் இது குறித்து பொதுப்பணித் துறையினரிடம் தெரி விக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் மணல் ரீச் மூடப்பட்டது நியாயமற்றது. இதனால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தொழிலாளர்களின் வாழ்வாதா ரத்தை கருத்தில் கொண்டு மணல் ரீச் உடனே திறக்க வேண்டும். அவ்வாறு திறக்காத பட்சத்தில் வரும் 22-ம் தேதி ஆட்சியர் அலுவலகம் முன் மணல் மாட்டு வண்டி தொழிலாளர்களின் குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என தெரிவித்தார்.