tamilnadu

img

தேரோடும் வீதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம் திருநாகேஸ்வரம் பேரூராட்சி நடவடிக்கை

கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் பேரூராட்சி பகுதியில் ஆக்கிரமிப்பு செய்துள்ளோர் தாமாகவே முன்வந்து அதனை அகற்றிக் கொள்ள வேண்டும் என பேரூராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி பத்திரிகை மற்றும் ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு திருநாகேஸ்வரம் பேரூராட்சி செயல் அலுவலர் வி. சிவலிங்கம் அறிவிப்பு வெளியிட்டிருந்தார் இந்நிலையில் நாகநாத சுவாமி கோயில் (ராகுஸ்தலம்) கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழா டிசம்பர் 5 ஆம் தேதி தொடங்கி 16 ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது.அதையொட்டி தேரோட்டம் மற்றும் பல்லக்கு உற்சவங்கள் நடைபெற உள்ளதால் கடை வீதி, வடக்கு வீதி, மேல வீதி, தெற்கு வீதி, செட்டித் தெரு உள்ளிட்ட தேரோடும் நான்கு வீதிகளில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் போக்குவரத்து மற்றும் தேரோட்டத்திற்கு இடையூறாக சாலையில் ஆக்கிரமிப்பு செய்த சிலர் தாமாக அகற்ற முன்வராததால் வியாழனன்று ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் அதிகாரிகள் அதிரடியாக ஈடுபட்டனர்.

இதில் பேரூராட்சி செயல் அலுவலர் வி.சிவலிங்கம் தலைமையில், இளநிலை உதவியாளர் தயாள ராஜகோபாலன், அலுவலக பணியாளர்கள் ரமேஷ், செந்தில், முருகன், ரமணி, சின்னதுரை, அறிவுக் கடல் மற்றும் துப்புரவு பணியாளர்கள் திருநீலக்குடி, காவல் துறை அதிகாரிகள், வருவாய் துறை மற்றும் நெடுஞ்சாலை துறை, அறநிலையத்துறை பணியாளர்கள் ஈடுபட்டனர். இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட திருநாகேஸ்வரம் பேரூராட்சி செயல் அலுவலர் வி.சிவலிங்கம் மற்றும் பணியாளர்களுக்கு பொதுமக்கள் பக்தர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இது குறித்து பொது மக்கள் தெரிவித்ததாவது திருநாகேஸ்வரத்தில் ராகு ஸ்தலம் ஒப்பிலியப்பன் கோவில் என பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து கொண்டே இருக்கின்ற னர். ஆனால் கடைவீதிகளில் ஆக்கிரமிப்பு செய்வதனால் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் ரோட்டில் இருசக்கர வாகனங்கள் வைப்பது பக்தர்கள் பள்ளி மாணவர்கள், அன்றாட வேலைக்கு செல்பவர்க ளுக்கும் போக்குவரத்து இடையூறாக இருந்து வருகிறது. இப்போது திருநாகேஸ்வரம் பேருராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுத்து வந்துள் ளது. ஆனால் இது நிரந்தரமாக ஆக்கிரமிப்புகளை இனி வராமல் தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.