கடல் மீன்பிடி சட்ட அலுவலகம் திறப்பு
தஞ்சாவூர், மார்ச் 6- தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் துறை முகத்தில் உள்ள மீன்வளத் துறை அலுவலகத்தில் கடல் மீன்பிடி சட்ட அமலாக்கப் பிரிவு துவக்கப்பட்டு நடை முறைக்கு வந்துள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது. தஞ்சாவூர் மீன்வளத் துறை உதவி இயக்குனர் சிவக்குமார் தலைமை வகித்தார். சேதுபாவா சத்திரம் காவல் ஆய்வாளர் வீர.அண்ணாதுரை முன்னிலை வகித்தார். தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில பொதுச் செயலாளர் தாஜூதீன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். கடலோர பாதுகாப்பு குழும காவல் ஆய்வாளர சுபா, மீன்வளத்துறை ஆய் வாளர் கெங்கேஸ்வரி, விசைப்படகு தஞ்சை மாவட்ட தலைவர் ராஜ மாணிக்கம், நிர்வாகிகள் வடுகநாதன், செல்வக்கிளி, முத்து, இப்ராகிம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிலுவைத் தொகையை வழங்கக் கோரி ரயில்வே ஒப்பந்தக் காரர்கள் போராட்டம்
திருச்சிராப்பள்ளி, மார்ச் 6- ரெயில்வே பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்தக்காரர்களுக்கு கடந்த 6 மாதங்களாக பணி களை மேற்கொண்டதற்கான தொகை வழங்கப்படாமல் உள்ளது, இதுவரை ரூ 1200 கோடி வரை நிலுவையில் உள்ளது. இதனால் தொடர்ச்சியாக பணிகளை மேற்கொள்ள முடியாத நிலையில் கட்டு மானப் பணிகளை செய்ய வேண்டும் என தெற்கு ரெயில்வே நிர்வாகம் வற்புறுத்தி வருகின்றது. எனவே நிலுவையில் உள்ள தொகையினை உட னடியாக ஒப்பந்தக்காரர்க ளுக்கு வழங்கி, பணிகளை தொய்வின்றி நடைபெற வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தி தெற்கு ரெயில்வே ஒப்பந்ததாரர்கள் சங்கம் சார்பில் வெள்ளி யன்று திருச்சி ரயில்வே ஜங்சனில் பொதுச்செய லாளர் முத்துராமன் தலை மையில் போராட்டம் நடை பெற்றது. சங்க தலைவர் சுப்பிர மணியம், பொருளாளர் வெங்கடாசல பெருமாள், தொழில் அதிபர் ஜோசப்லூ யிஸ் மற்றும் அனைத்து ரெயில்வே கோட்டங்களைச் சேர்ந்த ஒப்பந்தக்காரர்கள் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.