மணல் கடத்தல்: இருவர் கைது
தஞ்சாவூர், ஜூலை 11- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதி காட்டாறு களில் அனுமதி இன்றி மணல் கடத்தப்படுவதாக கோட் டாட்சியர் பூங்கோதைக்கு தகவல் கிடைத்தது. இதை யடுத்து அவரது தலைமையில் அலுவலர்கள் கண்கா ணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பூவானம் கிராமத்தில் அக்னி ஆற்றிலி ருந்து அனுமதி இல்லாமல் மணல் ஏற்றி வந்த ஒரு லாரி, மாட்டு வண்டியை நயினாங்குளம் அருகே நடைபெற்ற சோதனையில் பறிமுதல் செய்து பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து லட்சத் தோப்பு தெற்குத்தெரு செந்தில்குமார், முருகன் ஆகிய இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
வாலிபர் தற்கொலை
கும்பகோணம், ஜூலை 11- தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா அய்யம்பேட்டை காவல் நிலைய காவலர் பிரபு வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த காவல்துறை விசாரணையில், பிரபு குடிப் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத பொழுது தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக தெரி விக்கப்பட்டது. மேலும் இதற்கிடையே பிரபு, திருநீலக்குடி காவல் நிலையத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டிருந்தார்.
மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க கோரிக்கை
கும்பகோணம், ஜூலை 11- திருப்பனந்தாள் அருகே அணைக்கரையில் உள்ள விநா யகன் தெரு அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2017-18ம் கல்வியாண்டில் படித்த மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை, லேப்டாப் வழங்காததை கண்டித்து திருப்ப னந்தாள் உதவி தொடக்க கல்வி அலுவலகம் முன்பாக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப் பட்டது. இதையடுத்து திருவிடைமருதூர் தாலுகா அலு வலகத்தில் தாசில்தார் சிவக்குமார் முன்னிலையில் முத்த ரப்பு பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. இதில் மாணவர்கள், பெற்றோர்கள், கல்வித் துறை அலு வலர்கள், கலந்து கொண்டனர். அப்போது தாசில்தார் கூறுகையில், நடப்பு கல்வி ஆண்டு மாணவர்களுக்குரிய உதவி தொகை மற்றும் லேப்டாப் வழங்கிய பிறகு முந்தைய கல்வி ஆண்டு மாணவர்களுக்கும் உரிய சலுகை கிடைக்க முதன்மை மாவட்ட கல்வி அலுவலரிடம் ஆலோ சனை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இம்முடிவினை அனைத்து தரப்பினரும் ஒப்பு கொண்ட னர். இதையடுத்து நடக்க இருந்த ஆர்ப்பாட்டம் கைவி டப்பட்டது.
பயிர் விதைப்பு செய்ய இயலாதவர்களும் காப்பீடு செய்யலாம்
தஞ்சாவூர், ஜூலை 11- 2019-20 ஆம் ஆண்டு மத்திய பயிர்க் காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்து கொண்டால் ஏக்கருக்கு காப்பீட்டுத் தொகை ரூ.31,000 என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான பிரீமியத் தொகை காப்பீடு தொகையில் இரண்டு சதமான ரூ.620 செலுத்தி காப்பீடு செய்து கொள்ள வேண்டும். விதைப்பை தவிர்த்தல்(விதைப்பு மேற் கொள்ள இயலாத சூழ்நிலை), விதைத்து கருகிய நிலை, இயற்கை சீற்றங்களால் பயிர் பாதிப்பு ஏற்பட்டு மகசூல் பாதிக்கும் நிலை மற்றும் அறுவடைக்கு பிந்தைய இழப்பு என நான்கு நிலைகளில் பயிர்க் காப்பீடு செய்து கொள்ள லாம். மேலும் விபரங்களுக்கு தங்கள் பகுதி வேளாண் உதவி அலுவலர் அல்லது வட்டார வேளாண் உதவி இயக்கு நரை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடு புகுந்து கொள்ளை
சீர்காழி, ஜூலை 11- நாகை மாவட்டம், சீர்காழி அருகே புதுப்பட்டினம் ஊராட்சி தற்காஸ் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் கண்ணன்(57). இவர் மளிகை பொருட்கள் வியா பாரம் செய்து வருகிறார். இவர் சம்பவத்தன்று குடும்பத்தி னருடன் சென்னை சென்று விட்டு மீண்டும் வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 2 பவுன் நகை, 20 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவை கொள்ளை போனது கண்டு அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து புதுப்பட்டினம் காவல்துறையில் புகார் கொடுத்தார். இதன் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது.
கூட்டுப் பண்ணைத் திட்டப் பயிற்சி
சீர்காழி, ஜூலை 11- நாகை மாவட்டம் சீர்காழி அருகே கூத்தியம்பேட்டை கிராமத்தில் வட்டார வேளாண் துறையின் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான கூட்டுப் பண்ணைத் திட்டப் பயிற்சி முகாம் நடைபெற்றது. அட்மா திட்ட மேலாளர் ரேகா தலைமை வகித்தார். வட்டார வேளாண் அலுவலர் விவேக் வரவேற்றார். வட்டார வேளாண் உதவி இயக்கு நர் சுப்பையன் பேசினார். உதவி தொழில்நுட்ப மேலா ளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புத்தூர் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை தேதி நீட்டிப்பு
சீர்காழி, ஜூலை 11- நாகை மாவட்டம் சீர்காழி அருகே புத்தூர் சீனிவாசா சுப்பராயா அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் தமிழரசி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2019-20 ஆம் கல்வி ஆண்டிற்கான நேரடி இரண்டாம் ஆண்டு மாண வர்களுக்கான சேர்க்கை இம்மாதம் வரும் 12-ந் தேதி வரையும், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான சேர்க்கை வரும் 19 ஆம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்ப முள்ள மாணவ- மாணவியர் கல்லூரி முதல்வரை நேரில் சந்தித்து விண்ணப்பித்து பயன் பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.