tamilnadu

img

சாலையோரம் வசிப்பவர்களுக்கு அறம் மக்கள் நல சங்கத்தினர் உணவு அளித்தனர்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த 22-ஆம் தேதி சுயஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்ட நிலையில் திருச்சியில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால் சாலையோரம் வசிப்பவர்கள், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் என பலரும் உணவின்றித் தவித்தனர். அவர்களுக்கு, அறம் மக்கள் நல சங்கத்தின் தலைவர் டாக்டர் ராஜா, பொதுச்செயலாளர் ரமேஷ் குமார் இருவரும் ஒரு குழுவாக இணைந்து உணவு அளித்தனர். இதே போல் தமிழ்நாடு முழுவதும் அறம் மக்கள் நல சங்க முக்கிய நிர்வாகிகள் ஆதரவற்றோருக்கு உணவு அளித்தனர்.