திருச்சிராப்பள்ளி, ஆக.24- சிஐடியு சாலையோர வியாபாரிகள் சங்க புதிய கிளை துவக்கவிழா வையம்பட்டி பஸ் நிலையம் அருகில் நடைபெற்றது. விழாவிற்கு ஒன்றிய ஒருங்கிணைப்புக்குழு தலைவர் வெள்ளைச்சாமி தலைமை வகித்தார். சங்க கொடியை சிஐடியு புறநகர் மாவட்ட செயலாளர் சிவராஜ் ஏற்றினார். பெயர் பலகையை சிஐடியு சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் பழனிசாமி திறந்து வைத்தார். வி.ச.புறநகர் மாவட்ட செயலாளர் சிதம்பரம், ஒன்றிய தலைவர் வீரமணி, ஒன்றிய பொருளாளர் திருநாவுக்கரசு, சிபிஎம் ஒன்றிய செயலாளர் வெள்ளைச்சாமி, டிஒய்எப்ஐ ஒன்றிய ஒருங்கிணைப்பு தலைவர் முருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் சங்க தலைவர் பிலவேந்திரன், துணைத்தலைவர் லெட்சுமணன், துணைச் செயலாளர் பெரியசாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தரைக்கடை சங்க கிளை செயலாளர் அந்தோணி நன்றி கூறினார்.