tamilnadu

img

மீனவர் நலவாரியப் பலன்களை முழுமையாக வழங்கிடக் கோரிக்கை

நாகப்பட்டினம்: மீன்பிடி தொழிலாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின்  நாகை மாவட்டப் பேரவைக் கூட்டம், வியாழக்கிழமை அன்று, நாகப்பட்டினம் அரசு ஊழியர் சங்கக் கூட்ட அரங்கில் நடைபெற்றது. பேரவைக்கு மாவட்ட அமைப்பாளர் சி.வி.ஆர். ஜீவானந்தம் தலைமை வகித்தார். நாகைத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சு.மணி வரவேற்றார். சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலாளர் சீனி.மணி துவக்கவுரையாற்றினார். மாவட்டப் பொருளாளர் ஆர்.ரவீந்திரன் வாழ்த்துரை வழங்கினார். சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.அந்தோணி நிறைவுரையாற்றினார். மத்திய- மாநில அரசுகள், பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட வேண்டும். மீனவர் நலவாரியப் பலன்களை முழுமையாக வழங்கிட வேண்டும். மீன்பிடி இல்லாத காலங்களில் உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கத்தின் மாவட்டத் தலைவராக சி.வி.ஆர். ஜீவானந்தம், மாவட்டச் செயலாளராக அம்மையப்பன், மாவட்டப் பொருளாளராக எல்.பி.வசந்தி, துணைத் தலைவர்களாக சு.மணி, வி.மறைமலை, துணைச் செயலாளர்களாக காளியப்பன், நாகராஜன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.