tamilnadu

img

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம்

பொன்னமராவதி: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் சுதா அடைக்கலமணி தலைமையில் நடை பெற்றது. ஒன்றிய ஆணையர்கள் வேலு, சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், நடப்பு ஆண்டு வரை வரவு செலவு கணக்குகள் அனைத்தும் கவுன்சிலர்கள் முன்னிலையில் வாசிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டது. தொடர்ந்து கூடலூரில் சமுதாய கூடம், அரசமலையிலிருந்து நெய்வேலி வழியாக வாழைக்குறிச்சி செல்லும் தார்ச்சாலையை சீரமைக்க வேண்டும். ஒன்றியத்தில் உள்ள 18 அரசு பள்ளிகளின் கட்டிடங்களை சரி செய்ய வேண்டும் உள்ளிட்டவைகளை கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர்.  ஒன்றிய குழு துணை தலைவர் தனலட்சுமி அழகப்பன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அடைக்கலமணி, முருகேசன், பழனிச்சாமி, ஆதிலட்சுமி, சிவரஞ்சனி, பிரியங்கா, பழனியப்பன், வளர்மதி, பழனியாண்டி, மாணிக்கம், அழகு ரத்தினம், கல்யாணி, செந்தில், விஜயா, பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.