சிதம்பரம், ஜூன் 30- கடலூர் மாவட்டம் குமராட்சி ஒன்றியத்தி ற்குட்பட்ட பகுதிகளை ஒருங்கிணைத்து சிதம்பரம் அருகே அம்மாபேட்டையில் துணை வேளாண்மை விரிவாக்க மையம் செயல்பட்டு வந்தது. இந்த கட்டிடம் வலுவிழந்து உள்ளதால் கடந்த 2018ஆம் ஆண்டு அதே இடத்தில் ரூ. 27 லட்சம் மதிப்பில் புதிய கட்டடம் கட்டும் பணிகள் நடைபெற்று சமீபத்தில் பணிகள் நிறைவடைந்தன. இதையடுத்து புதிய கட்டடத்தை சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் பாண்டியன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் வேல்விழி, குமராட்சி ஒன்றிய வேளாண்மை உதவி இயக்குநர் அமிர்தராஜ், பரங்கிப்பேட்டை உதவி இயக்குநர் விஜயராகவன் உள்ளிட்ட வேளாண்மைத் துறை அலுவலர்கள், ஊழியர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர். குமராட்சியை தலைமை யிடமாகக் கொண்டு செயல்படும் இந்த வேளாண்மை விரிவாக்க மையத்தை விவசாயிகள் தொழில்நுட்பம், வேளாண்மை இடு பொருட்கள் வழங்கிட ஏது வாக இந்த மையம் உள்ளது. இந்த அலுவலகத்தை விவசாயிகள் நல்லமுறை யில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வேளாண்மை இணை இயக்குநர் கேட்டுக் கொண்டார்.