அறந்தாங்கி, பிப்.3- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா சுப்பிர மணியபுரம் ஊராட்சி கூகனூர் குடி யிருப்பை சேர்ந்த கருப்பையா மகன் சிவக்குமார் மற்றும் நான்கு நபர்களை குற்றவாளிகள் என்று தவறுதலாக காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு லத்தி யால் அடித்து காலையில் இருந்து மாலைவரை காவல்நிலையத்தில் சித்ரவதை செய்து கேவலமாக நடத்தினர். மன உளைச்சலை உண்டாக்கி மனித உரிமையை மீறிய செயலில் ஈடுபட்ட நாகுடி காவல் உதவி ஆய்வாளர் நவீன்குமார் மற்றும் உடந்தையாக செயல்பட்டு அசிங்கமாக பேசிய ஜயப்பன் உள்ளிட்ட காவலர்கள் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அறந்தாங்கி தாலுகா குழு சார்பாக கடந்த வெள்ளி க்கிழமை மாலை சுப்பிரமணியபுரம் கடைவீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் தாலுகா செயலாளர் தென்றல் கே. கருப்பையா தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், நகர செயலாளர் தங்கராஜ், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் கர்ணா, தமுஎகச மாவட்ட துணை தலைவர் கவிபாலா, சிபிஎம் தாலுகா குழு உறுப்பினர்கள் கணேசன், சரோஜா, ஜான், சாத்தையா, விச தர்மராஜ், விதொ செல்லமுத்து வாலிபர் சங்க நிர்வாகிகள் கோபால், சசிகுமார், நாராயண மூர்த்தி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.