tamilnadu

img

காலமானார்

குடவாசல், மே 17-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குடவாசல் ஒன்றியக் குழு உறுப்பினரும், தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றியச் செயலாளருமான டி.ஜி.சேகரின் தாயார் டி.அம்சவள்ளி (72), சில காலமாக அகர ஒகை மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள அவர் வீட்டில் உடல் நலம் இன்றி மருத்துவ சிகிச்சையில் இருந்தார். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு அம்சவள்ளி அம்மையார் காலமானார்.அவரது மறைவு செய்தி அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் வி.எஸ்.கலியபெருமாள், தலைவர் எஸ்.தம்புசாமி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைச் செயலாளர் சின்னை பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.கந்தசாமி, ஜி.பழனிவேல் ஆகியோர் அவரது உடலுக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.அம்மையாரின் இறுதி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை 4 மணி அளவில் அகர ஒகை மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்கள் எப்.கெரக்கோரியா, கே.சுப்பரமணியன், தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.லட்சுமி, வடக்கு ஒன்றிய செயலாளர் கே.அன்பழகன், வலங்கைமான் ஒன்றிய செயலாளர் என்.ராதா, முன்னாள் பேரூராட்சி தலைவர் டி.அய்யாறு, திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளர் ஜீவபாரதி மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், வெகுஜன அரங்கத்தின் பொறுப்பாளர்கள், தோழர்கள் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.