நூறு நாள் வேலைத் திட்ட தொழிலாளர்கள் போராட்டம்
மண்ணச்சநல்லூர் ஜூலை 19- திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஊராட்சியை சேர்ந்தது நம்பர்-2 கரியமாணிக்கம். வெள்ளியன்று நூறு நாள் வேலைக்காக வந்திருந்த ஊரக தொழிலாளர்களுக்கு ஐந்து கி.மீ தள்ளி உள்ள இடத்தில் வேலை வழங்கினர். அங்கு செல்ல ஊராட்சி நிர்வாகமே வாகன வசதி செய்து கொடுக்க வேண்டுமென்று ஊராட்சி மன்ற அலுவலகத்தை திடீர் முற்று கையிட்டனர். பின்னர் அவர்களை சமாதானப்படுத்திய ஊராட்சி மன்ற அலுவலர்கள், அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் இரண்டொரு நாட்களில் நடந்து செல்லும் தொலை விலேயே வேலை வாய்ப்புகளை தருவதாகவும், குறைவான கூலியை உயர்த்தி தருவதாகவும் வாக்குறுதி அளித்ததை தொடர்ந்து தொழிலாளர்கள் கலைந்து சென்றனர். போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் சி.முருகேசன் தலைமை வகித்தார். ஒன்றிய துணைச் செயலாளர் டி.நல்லையன், ஒன்றியப் பொரு ளாளர் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வி.தொ.ச.மாவட்ட தலைவர் ஜெ.சுப்ரமணியன், சி.பி.எம். ஒன்றியச் செயலாளர் எம்.ஜி.ரவிச்சந்திரன், வி.தொ.ச. வட்டக்குழு உறுப்பினர் என்.செல்வராஜ், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தூய்மை பாரத திட்டத்தில் கழிவறை கட்டித் தருவதாக கூறி மோசடி
நடவடிக்கை எடுக்க மக்கள் வேண்டுகோள்
குடவாசல், ஜூலை 19- திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்தில் சிமிழி ஊராட்சி கீழநானசேரி மாதா கோவில் தெருவில் சுமார் 40 குடும்பங்கள் உள்ளன. இவர்கள் கழிவறையின்றி பல காலம் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் பாரத பிரதமரின் தூய்மை பாரத இயக்க திட்டத்தில் 40 கழிவறைகள் கட்டுவதற்கான திட்டம் வந்துள் ளது. இதனை பயன்படுத்திய தனிநபர் ஒருவர் ஊர் மக்களி டம் கழிவறை ஒன்றுக்கு ரூ. 500 வீதம் வசூல் செய்துவிட்டு 40 கழிவறையில் 29 கழிவறைகளை மட்டும் தரமில்லாமல் கட்டி முடித்து உள்ளார். மீதமுள்ள 11 கழிவறைகளுக்கு அதற்கான கற்களை மட்டும் அடுக்கி வைத்து 6 மாதத்திற்கு மேலாகிறது. கடந்த 6-7 மாதங்களாக இதே நிலை நீடிப்பதால் சம்பந்தப்பட்ட நபரிடமும் ஊராட்சி செயலாளரிடம் தங்களுக்கான கழிவறை யை கட்டி தரவேண்டும் என பலமுறை கேட்டுள்ளனர். ஆனால் இதுநாள் வரை மாதா கோவில் தெரு பயனாளி களுக்கு 11 கழிவறைகளை முழுமையாக கட்டி முடிக்கா மல் சுவர் மட்டும் எழுப்பிய நிலையில் உள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது மாவட்ட திட்ட இயக்குநனர் ஊரக முகமை அலுவலர் உரிய விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்ட நபர்களுக்கு புதிய கழிவறை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் குட வாசல் ஒன்றியச் செயலாளர் டி.ஜி.சேகர் கூறுகையில், மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் இந்த மோசடி மீது தனி கவனம் எடுத்துக் கொண்டு பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நீதி வழங்க வேண்டும். மேலும் அன்னவாசல் ஊராட்சியில் மழவச்சேரி கிராமத்தில் இதேபோல் மோசடியால் பாதிக்கப்பட்ட 22 பயனாளிகளுக்கு கழிவறைகள் கட்டித்தருவதாக அதிகாரிகள் வாக்குறுதி கொடுத்து, இதுநாள்வரை நிறைவேற்றாமல் உள்ளனர். இதனையும் கவனத்தில் கொண்டு அரசு திட்டங்களில் மக்களை ஏமாற்றி மோசடி செய்யும் நபர்களையும் மோசடிக்கு துணை செய்யும் அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மக்களை திரட்டி குடவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்படும் என்றார்.
ஏடிஎம் மையத்தை மீண்டும் திறக்க சிபிஎம் கோரிக்கை
புதுக்கோட்டை, ஜூலை 19- புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளது. இந்த வங்கியில் விவசாயிகள், வர்த்தகர்கள், தொழிலாளர்கள் என பலதரப்பட்ட மக்கள் கணக்குத் தொடங்கி வரவு-செலவு வைத்து வருகின்றனர். இந்த வங்கிக்கான ஏடிஎம் அறை அரிமழம் பேருந்து நிலை யம் அருகில் உள்ளது. ஆனால், இந்த ஏடிஎம் மையம் கடந்த மூன்று ஆண்டுகளாக இயங்காமல் உள்ளது. இந்த மையம் அவசரத்திற்கு பணம் தேவைப்படுபவர்களுக்கு பேருதவி யாக இருந்தது. இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக ஏடிஎம் மையம் திறக்கப்படாததால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வரு கின்றனர். எனவே, ஏடிஎம் மையத்தை மீண்டும் திறக்க வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வங்கி மேலா ளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கட்சி யின் ஒன்றியச் செயலாளர் ஜி.நாகராஜன், விவசாயிகள்சங்க ஒன்றியச் செயலாளர் ஏ.அடைக்கப்பன், தமுஎகச மாவட்ட துணைச் செயலாளர் சு.கவிபாலா மற்றும் ஆர்.வெள்ளைச்சாமி, கா.பலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.