tamilnadu

img

மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கல்

புதுக்கோட்டை, ஜூன்.4-கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் உலக சுற்றுச் சூழல்தினத்தையொட்டி நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு உதவி தலைமை ஆசிரியர் கணேசன் தலைமை வகித்தார். பேரூராட்சி முன்னாள் தலைவர் துரை மற்றும்பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் அறந்தாங்கி வனத்துறை அதிகாரி ராஜேந்திரன் மற்றும் மரம் தங்க கண்ணன் ஆகியோர் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டதோடு, மாணவர்களுக்கும் மரக்கன்றுகளை வழங்கினார். விழாவில் பொதுமக்கள், ஈசா யோகாபசுமைக்கரங்கள் திட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.