tamilnadu

img

வினாத்தாள் குளறுபடி தஞ்சையில் குரூப் 2 தேர்வு தாமதமாக தொடங்கியது

தஞ்சாவூர், பிப்.25- தமிழ்நாட்டில் சனிக்கிழமை நடைபெற்ற குரூப் 2, 2-ஏ முதன்மை தேர்வு தஞ்சை மாவட் டத்தில் தஞ்சை பாரத் அறிவியல் கல்லூரி, மன்னர் சரபோஜி அரசு கல்லூரி, வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், சாஸ்திரா பல்கலைக்கழகம், கலைமகள் மேல்  நிலைப்பள்ளி, அடைக்கல மாதா கல்லூரி  ஆகிய 6 மையங்களில் தேர்வு நடைபெற்றது. தேர்வை எழுத 2025 பேர் தகுதி பெற்றிருந்தனர்.  இந்நிலையில், தஞ்சாவூர் பாரத் கல்லூரி யில் காலை 9.30 மணிக்கு தொடங்க வேண்டிய தேர்வானது தொடங்கப்படாமல் காலதாமதம் ஏற்பட்டது. அதாவது தேர்வர்களுக்கு வழங்கப் பட்ட வினாத்தாளில் புக்லெட் சீரியல் நம்பர் மாறி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இத னால் தேர்வர்கள் குழப்பம் அடைந்தனர். இதன்  காரணமாக தேர்வு குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கவில்லை.  இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சி யர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உடனடியாக பாரத் கல்லூரிக்கு விரைந்து வந்து சரியான வினாத்தாள் கொடுக்க உடனடி நடவடிக்கை எடுத்தார். இதனால் காலை 9.30 மணிக்கு தொடங்க வேண்டிய தேர்வு 10 மணிக்கு தொடங்கியது. தாமதத்தை ஈடுகட்டும் வகையில் அரை மணி நேரம் கூடுதலாக வழங்கப்பட்டது. மேலும் தேர்வு மையத்திற்கு வெளியே கூடியிருந்த தேர்வர்களின் பெற்றோர்களிடமும் நிலைமையை எடுத்துக் கூறினார்.  இதேபோல் கூடுதல் ஆட்சியர் சுகபுத்ராவும் தேர்வு மையத்தில் ஆய்வு செய்தார். இதேபோல் சரபோஜி கல்லூரி தேர்வு மையத்திலும் வினாத்தாள் குளறுபடியால் அரை மணி நேரம் கழித்து தேர்வு தொடங்கியது.