tamilnadu

img

அரசு ஊழியர் சங்க நிர்வாகி, செவிலியர்கள் பணியிடை நீக்கம்

கரூர், ஜூன் 14- அரசு மருத்துவ துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பேச்சுவார்த்தையில் ஏற்றுக் கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், அரசு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் எம்.சுப்பிரமணியன் உள்ளிட்ட 4 செவிலியர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளதை கண்டித்தும், உடனடியாக பணி நீக்கம் உத்தரவை திரும்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தின் மாவட்டக்குழு சார்பில் கரூர் அரசு மருத்துவமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் எம்.சுப்பிரமணியன் கண்டன உரையாற்றினார். மாவட்ட செயலாளர் இளங்கோ, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கே.சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.