தரங்கம்பாடி, ஜூலை 4- நாகை மாவட்டம் மயிலாடு துறை அருகே முத்தூரில் பணி செய்து கொண்டிருந்தபோது ஒப்பந்த மின் ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை அருகே கிளிய னூர் மின்வாரிய பிரிவில் கடந்த 2 ஆண்டுக்கும் மேலாக பணியாற்றி வந்த பெருஞ்சேரி கிராமம், வடக்குத்தெருவை சேர்ந்த பழனி என்பவரது மகன் கணேஷ்(20) புதனன்று முத்தூர் அகர ஆதனூர் பகுதியில் வயலில் சாய்ந்து கிடந்த மின் கம்பத்தை சீரமைப்பதற்காக சக மின் ஊழியர்களுடன் பணியில் ஈடுபட்டபோது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த ஊழியருக்கு நிவாரணம் வழங்க பரிந்துரைக்க அதிகாரிகள் மறுப்பதாக குற்றஞ்சாட்டுகின்றனர். உடனடியாக கணேஷ் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லையெனில் போராட்டம் நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.