tamilnadu

img

டிப்.8 கிறிஸ்வர் கோரிக்கை மாநாடு: சிறுபான்மை மக்கள் நலக்குழு முடிவு

தஞ்சாவூர்: தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்ட மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம் தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  கூட்டத்திற்கு, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு தஞ்சை மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் மூசா, மாநிலக்குழு முடிவுகள், மண்டல மாநாடு மற்றும் சிறுபான்மை மக்கள் சந்தித்து வரும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து சிறப்புரையாற்றினார்.  தஞ்சை மாவட்டச் செயலாளர் பி.எம்.காதர் உசேன், நாகை மாவட்டச் செயலாளர் அபுபக்கர், திருவாரூர் மாவட்டச் செயலாளர் ராமசாமி, புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகி கள் உடையப்பன், சாக்கோ அந்தோணிசாமி, தஞ்சை மாவட்ட பொருளாளர் ஞான மாணிக்கம், மாவட்ட நிர்வாகிகள் ஏ.ஆர்.சேக் அலாவுதீன், எம்.ராம், தங்கராசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்தில், “தலித் கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு, கிறிஸ்தவர் கோரிக்கை மாநாட்டை, வரும் பிப்.8 தஞ்சையில் நடத்துவது, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு தஞ்சை மாவட்ட மாநாட்டை டிசம்பர் மாதத்திற்குள் நடத்தி முடிப்பது, ஒன்றியங்கள் தோறும் கிளைகள் அமைப்பது, மார்ச் மாதம் நடைபெற உள்ள தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மதுரையில் நடத்தும் மாநில மாநாட்டில் திரளானோர் கலந்து கொள்வது, சிறுபான்மை மக்கள் பிரச்சனைகளில் தலையிட்டு, நியாயம் கிடைக்க போராட வேண்டும்” என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.