கூடுதல் கவனம் வேண்டும் என டிஆர்பி ராஜா அறிக்கை
மன்னார்குடி, ஜூன் 19- மன்னார்குடி அரசு மருத்துவமனை யில் கொரோனா நோயாளிகள் தனி பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் மற்றும் மருத்துவ பணி யாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு எச்சரிக்கையோடு செயல்பட வேண் டும் என டிஆர்பி ராஜா எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார். இது பற்றி பத்திரிகை யாளர்களுக்கு அவர் அனுப்பியுள்ள அறிக் கையில் தெரிவித்துள்ளதாவது: கொரோனா தாக்கம் தொடர்ந்து படிப் படியாக அதிகரித்து வரும் இக்கால சூழலில் திருவாரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களை திருவாரூர் அரசு மருத்துவமனையின் தனிப்பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டி ருந்தார்கள். ஆனால் திடீரென்று மன்னார் குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனையிலும் கொரோனா நோய் தொற் றுள்ளவர்கள் சிலரை அனுமதித் துள்ளனர். எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென்று கொரோனா நோயாளிகள் புதிதாக மன்னார்குடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிகுந்த பதட்டத்தை பொதுமக்களிடையே உரு வாக்கியுள்ளது.
திருவாரூர் அரசு மருத்துவமனையில் ஏறத்தாழ 200க்கும் மேற்பட்ட படுக்கை மற்றும் இதர வசதிகளுடன் தனிப்பிரிவு இருக்கிறது என்று அரசு தெரிவித்து வரும் நிலையில் புதிதாக மன்னார்குடியில் ஏறத்தாழ 100 படுக்கைகளும், திருத்து றைப்பூண்டியில் 75 படுக்கைகளும் உருவாக்கப்பட்டுள்ளன என்று அரசு வட்டா ரங்களிலிருந்து செய்திகள் வருகின்றன. மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கொரோனா தொற்றுள்ள நான்கு நோயாளிகளை மட்டும் அனுமதித்துள்ளதாகவும் அவர்க ளுக்கு பெரிய அளவிலான நோய் பாதிப்பு கள் எதும் இப்போதைக்கு இல்லையென் றும், மன்னார்குடி மருத்துவமனையில் உள்ள செவிலியர்கள் மற்றும் மருத்து வர்களுக்கு கொரோனா தொற்று ஏற் பட்டுள்ள நோயாளிகளை கவனிக்க பயிற்சியளிக்கும் வகையில் அனுமதித்து உள்ளதாக கூறுகின்றனர்.
எதிர்வரும் நாட்களில் கொரோனா தொற்று பல மடங்கு அதிகரிக்கும் சூழ்நிலை உள்ள தற்போதைய நிலையில் முன்னெச்சரிக்கையுடன் தயார் நிலை யில் இருக்க வேண்டியது அரசின் கடமை ஆனால் அதேநேரத்தில் மன்னார் குடி மாவட்ட தலைமை மருத்துவமனை யில் பணியாற்றும் மருத்துவர்கள், செவி லியர்கள் மற்றும் இதர நோயாளிகளின் பாதுகாப்பும் உடல் ஆரோக்கியமும் மிகவும் அவசியம் எனவே மன்னார்குடி மருத்துவமனையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நோயாளிகளை அனுமதிக்க வேண்டிய சூழல் தொடர்ந்து உருவாகுமேயானால் அதற்கென ஒர் தனிப் பிரிவை ஏற்படுத்தி புதிதாக கட்டப் பட்டுள்ள கட்டிடதையோ அல்லது வேறு கட்டிடத்தையோ முழுமையாக கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்காக மட்டுமே பயன்படுத்திக் கொண்டு, பிற இடங்களை உயர் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக பலப்படுத்த வேண்டியது அவசியம்.
அதே போல் மருத்துவர்கள், செவி லியர்கள் மற்றும் பணியாளர்களை கூட்ட நெரிசல் அதிகமிருக்கும் மன்னார்குடி நகரத்தின் மையத்தில் ஒரு பகுதியில் தங்க வைப்பதற்கான முன்னேற்பாடுகள் தொடங்கியிருக்கின்றன என்ற செய்தி கள் பரவுகின்றன. இதுகுறித்து அரசு அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டு மென்று கோரிக்கை வைத்ததற்கு செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் மட்டும் தங்குவதற்காகவே தனியார் விடுதி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும், மேலும் அதற்குரிய பாதுகாப்பு எச்சரிக்கை நடவடிக்கைகள் முழுவீச்சில் நடைபெறும் என்றும் உறுதி அளித்துள்ளனர். முன்னெச்ச ரிக்கையுடன் தயார் நிலையில் மருத்து வர்களும் செவிலியர்களும் இருக்க வேண்டியது அவசியமென்றாலும் மருத்துவமனையில் பணியாற்றும் இதர பணியாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமையாகும். எனவே எதிர்வரும் காலங்களில் தொற்று மிக அதிகளவில் ஏற்பட்டால் திரு வாரூரில் படுக்கைகள் முழுவதும் நிரப்பப்பட்டு இடம் இல்லாத சூழலில் மட்டுமே மன்னார்குடி மருத்துவமனை யில் நோயாளிகளை அனுமதிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தியுள்ளேன். அடுத்து வரும் சில வாரங்கள் தொற்று எண்ணிக்கை கடுமையாக உயரும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர் எனவே அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இந்நோய் தொற்றை எதிர்கொள்ள வேண்டும். இவ்வாறு டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.