tamilnadu

img

இளையபெருமாள் ஊராட்சி தலித் மக்களுக்கு அடிப்படை வசதி செய்து தரக் கோரிக்கை

அரியலூர், ஜூலை 1- அரியலூர் மாவட்டம் இளையபெரு மாள் ஊராட்சியில் 300-க்கு மேற்பட்ட தலித் குடும்பங்கள் போதிய அடிப்படை வசதி இன்றி வசிக்கின்றனர். பள்ளி- கல்லூரி, அலுவலக நேரத்திற்கு பேருந்து வசதி இல்லை உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கங்கை கொண்ட சோழ புரத்தில் கோயில் முன்பு உண்ணாவிர தம் இருப்பதற்கு மக்கள் முயன்ற போது, மீன்சுரும்டி காவல்துறையினர் இதற்கு அனுமதி இல்லை. அமைதி பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்படும் என கூறியதை தொடர்ந்து உண்ணா விரத பந்தல் அகற்றப்பட்டது.  பின்னர் விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டப் பொருளாளர் சி.உத்தி ராபதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்ன துரை, மாவட்டச் செயலாளர் ஆர்.மணிவேல், ஒன்றிய செயலாளர் எம். வெங்கடாசலம், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோவன், ஒன்றிய குழுத் தலை வர் சி.ரமேஷ், மாதர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.மீனா, ஒன்றியச் செயலா ளர் கே.சுசிலா ஆகியோர் முன்னிலை யில், ஜெயங்கொண்டம் தாசில்தார் குமரையா, டிஎஸ்பி கென்னடி உள் ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில், ஒரு மாதத்தில் இக்கோரிக்கை நிறை வேற்றப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து மக்கள் கலைந்து சென்ற னர்.