அறந்தாங்கி, ஜூன் 20- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் ஆவணத்தான்கோட்டை மேற்கு நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு கராத்தே தகுதி பட்டை வழங்கும் விழா மற்றும் சென்னையில் கின்னஸ் சாதனை படைத்த மாணவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. தலை மையாசிரியர் கலைச்செல்வி வரவேற்புரை நிகழ்த்தினார். கடலோர காவல்படை உதவி ஆய்வாளர் ஜவஹர் கலந்து கொண்டார். வட்டார வள மேற்பார்வையாளர் சிவ யோகம் ஆசிரியர் பயிற்றுனர் பியூலா சாந்தி பாரதி முற்றம் நிறுவனர் அஜய்குமார்கோஷ் கராத்தே சோஷியல் கிளப் ரெங்கநாதன் ஜெயமதன் வீரன் சிறப்பு ஆசிரியர் சசி கலந்து கொண்டனர். சென்னையில் 60 மணி நேர சிலம்ப போட்டியில் கின்னஸ் சாதனை படைத்த மாணவர்களுக்கு சான்றி தழ், கேடயம் வழங்கப்பட்டது. மேலும் கராத்தே தகுதி பட்டையினை மாணவர்களுக்கு மாஸ்டர்கள் முத்துக் குமார், கார்த்திகேயன் வழங்கினர். இந்த கல்வி யாண்டிற்கான சிலம்ப பயிற்சி வகுப்புகள் தொடங்கப் பட்டன. நிறைவாக பள்ளி கணித ஆசிரியை மேகலா நன்றி கூறினார்.