tamilnadu

img

சிறுமியின் பெற்றோருக்கு மாதர் சங்கம் ஆறுதல்...

திண்டுக்கல்:
பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டு வன்கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை மாதர் சங்கத் தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறினர். வடமதுரை அருகேயுள்ள குரும்பப்பட்டியைச் சேர்ந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வன்கொலை செய்யப்பட்ட வழக்கில் மகளிர் நீதிமன்றம் குற்றவாளியை விடுவித்து தீர்ப்பளித்தது. இதனையடுத்து வடமதுரையில் மாதர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக சனியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தையடுத்து மாதர் சங்கத் தலைவர்கள் ராணி, ஜானகி, வனஜா, ராஜேஷ்வரி, அடங்கிய குழு சிறுமியின் பெற்றோர்கள் லட்சுமி, வெங்கடாச்சலம் ஆகியோரை  சந் தித்து ஆறுதல் கூறியது. கடந்த ஒருவருடமாக அந்த வீட்டுக்குச்  செல்ல மனமில்லாமல் வடமதுரை மற்றும் திண்டுக்கல் பகுதிகளில் உறவினர் வீடுகளில்சிறுமியின் குடும்பத்தினர் வசித்து வந்தனர். ஓராண்டுக்கு பிறகு தங்களது வீட்டைத் திறந்து குழந்தையின் புகைப் படத்தை பார்த்து கதறி அழுதனர். இந்தவழக்கில் மாதர் சங்கம் மேல்முறையீடு செய்து உங்களுக்கு நீதியை பெற்றுத்தரும் என்று சிறுமியின் பெற்றோர் களுக்கு மாதர் சங்கத் தலைவர்கள் ஆறுதல் தெரிவித்தனர். மாதர் சங்கதலைவர்களுடன் சிஐடியு பகுதி தலைவர்கள் ஜோதிபாசு, மணவை கார்னிகன்ஆகியோர் சென்றிருந்தனர்.