பொள்ளாச்சி, மே 14- பொள்ளாச்சியில் சாலையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு திருநங்கைகள் நிவாரண உதவிகள் வழங்கினர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த சக்திநகர் பகுதிகளில் சாலையோரங்களில் வசிக் கும் ஆதரவற்றோர் குடும்பத்திற்கு பொள்ளாச்சி நங்கைகள் அமைப்பின் தலைவர் ஜெனிபர் மற் றும் தமிழ்ச்செல்வி ஆகியோர் தலைமையில் அத்தி யாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் 10 குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி, பருப்பு, எண் ணெய், காய்கறிகள் உள்ளிட்ட மளிகைப்பொருட் கள் வழங்கப்பட்டது. மேலும் துப்பரவு பணியா ளர்களுக்கும், ஆதரவற்ற முதியவர்களுக்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளிலிருந்தே தொடர்ந்து பொள்ளாச்சி நங்கை அமைப்பு மூல மாக நிவாரணம் பொருட்களும், உணவும் வழங் கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.