tamilnadu

இளம்பெண் மர்ம மரணம் காவல் நிலையத்தில் தந்தை புகார்

பென்னாகரம், மார்ச் 12- பென்னாகரம் அருகே இளம்பெண் மரணத்தில் சந் தேகம் உள்ளதாக தந்தை காவல் நிலையத்தில் புகார் கூறி யுள்ளார்.   தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள கே. அக்ரகாரம்  பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி சுதா (22). இவர்களுக்கு 5  ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.  இவர் களுக்கு முத்து தமிழரசன் (3) என்ற மகனும், வைஷா என்ற  மூன்று மாத மகளும் உள்ளனர்.  இந்நிலையில் வியாழனன்று சுதா உணவு சாப்பிட்டதாக தெரிகிறது. அப்போது சுதாவிற்கு மூச்சுத்திணறல் ஏற் பட்டு மயக்கம் அடைந்துள்ளார். இதை பார்த்த உறவி னர்கள்  108 ஆம்புலன்ஸுக்கு  தகவல்  கொடுத்துள்ளனர்.   ஆம்புலன்ஸ் பணியாளர்கள் வந்து அவரை பரிசோதித்த போது ஏற்கனவே இறந்து விட்டதாக கூறி உள்ளனர். இதனைத் தொடர்ந்து சுதாவின் தந்தை ரங்கன் ஒகேனக்கல் காவல் நிலையத்தில், தனது மகள் சுதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் சுதாவின் உடலை கைப் பற்றி பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த சுதாவிற்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகளே ஆனதால் சார் ஆட்சியர் விசாரணை மேற்கொள்வதற்கு ஏதுவாக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.