தருமபுரி, ஜூன் 3-அரசு அங்கீகாரம் பெறாமல் இயங்கும் தனியார் மெட்ரிக்பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவலியுறுத்தி தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழியிடம்பொதுமக்கள் மனு அளித்தனர்.இம்மனுவில் கூறியிருப்பதாவது, தருமபுரி மாவட்டம், அரூர்கல்வி மாவட்டத்துக்குட்பட்ட ஆர்.கோபிநாதம்பட்டியில் தனியாருக்கு சொந்தமான ஒளவை வித்யாஸ்ரம் மெட்ரிக்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் எல்.கே.ஜி. முதல் 10 ஆம் வகுப்பு வரை சேர்க்கை நடைபெற்று கற்பித்தல் பணி நடைபெற்று வருகிறது. இந்த தனியார் பள்ளி அரசு அங்கிகாரம் பெறாமல் நடத்தப்படுவதாக அறிகிறோம். சமீபத்தில் அரசு அங்கீகாரம் பெறாமல் பள்ளி நடத்தக் கூடாது என மாவட்ட நிர்வாம் அறிவுறுத்தியுள்ளது. இத்தகைய சூழலில் அங்கீகாரம் பெறாத இப்பள்ளியில் சேரும் மாணவர்களின் கல்வி எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.இதுகுறித்து கல்வி அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கை இல்லை. எனவே அங்கீகாரம் பெறாதது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.