tamilnadu

img

இட ஒதுக்கீடு குறித்து இழிவாக பேசிய பேராசிரியரை கண்டித்து மாணவர்கள் போராட்டம்

தருமபுரி, பிப்.4- இட ஒதுக்கீடு குறித்து இழிவாக பேசிய தருமபுரி அரசு கல்லூரி பேராசிரியரை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடு பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் தமிழ் பாடப்பிரிவில் முதுநிலை முதலாமாண்டு பயின்று வருபவர் அரவிந். இவரை அவ்வ குப்பில் பயிலும் மாணவி ஒருவர் கேலி செய் ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக் கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள் ளது. அப்போது, கல்லூரியின் உதவி பேரா சிரியர் கணேசன் என்பவர் அரவிந்தை அழைத்து, உனக்கெல்லாம் இட ஒதுக்கீட் டுல சீட்டுகொடுத்தது தப்பு, உன்னை ஒழிக் காமல் விடமாட்டேன் எனக் கூறி மிரட்டிய தாக கூறப்படுகிறது.  இதனை அறிந்த சக மாணவர்கள்  இட ஒதுக்கீடு குறித்து இழிவாக பேசிய  சம்மந்தப் பட்ட பேராசியர் மன்னிப்பு கேட்க வேண் டும் என வலியுறுத்தி கல்லூரி முதல்வர் அலு வலகம் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடு பட்டனர். இதனையடுத்து காவல்துறை துணை கண்காணிப்பாளர் சமைசிங்மினா கல்லூரிக்கு சென்று சம்மந்தப்பட்ட பேரா சிரியர் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தினார். மேலும், இதுதொடர்பாக உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப் பதாக உறுதியளித்ததன் அடிப்படையில் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.