tamilnadu

தருமபுரி முக்கிய செய்திகள்

இருளில் தவிக்கும் அலக்கட்டு மலைகிராம மக்கள்

தருமபுரி, ஜூன் 19- பென்னாகரம் வட்டத்துக்குட்பட்ட அலக்கட்டு மலைகிராமத்தில் காற்று மழையின் காரணமாக கடந்த 3 நாட்களாக மின்சாரம் இல்லாமல் அப்பகுதி மக்கள் இருளில் தவித்து வருகின்றனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட் டத்துக்குட்பட்ட அலக்கட்டு மலைகிராமம் தரைமட்டத்தில் இருந்து 4 ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது. இங்கு 60க்கும் மேற் பட்ட குடும்பங்கள் உள்ளன. இவர்க ளில் சிலருக்கு நிலம் உள்ளது. பலர் கால் நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இக்கிராமத்துக்குச் செல்ல பாலக்கோட்டி லிருந்து பெல்ரம்பட்டிக்குச் சென்று அங்கி ருந்து 8 கிலோமீட்டர் மலைஏறி நடந்து அலக்கட்டு கிராமத்துக்குச் செல்ல வேண் டும்.  தற்போது காற்று மழை அவ்வப்போது வருவதால் அக்கிராமத்தில் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. மழையினால் கடந்த மூன்று நாட்களாக மின்சாரம் இல்லை. இதளால், அலக்கட்டு மக்கள் இருளில் தவித்து வரு கின்றனர். இரவு நேரங்களில் வனவிலங் குகள் கிராமத்தினுள் நுழைந்து மனிதரை தாக்கும் அபாய நிலை உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அச்சத்துடன் மக்கள் உள்ளனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிக ளிடம் அப்பகுதி மக்கள் புகார் அளித் துள்ளனர். ஆனால், மலை மக்கள் என்ப தால் உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே உடனடியாக பழுதுடைந்த மின்மாற்றியை பழுதநீக்கி மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண் டும் எனஅக்கிராம மக்கள் மின்வாரிய அலுவலரையும், மாவட்ட நிர்வாகத் தையும் வலியுறுத்தியுள்ளனர்.

ஜூன் 21ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தருமபுரி, ஜூன் 19- தருமபுரியில் ஜூன் 21 ஆம் தேதியன்று விவசாயிகள் குறைத்தீர்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற ஜூன் 21 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முற்பகல் 11 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவ லக கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே, இக்கூட்டத்தில்  தருமபுரி மாவட் டத்தைச் சார்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்களது குறைகளையும், கருத்துக்களை யும் எடுத்துக் கூறி பயனடையுமாறு  தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தெரி வித்துள்ளார்.