தருமபுரி, மே 12-பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொம்மிடியில் குற்றச் சம்பவங்களைத் தடுக்க விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் காவல் துறையினர் வழங்கினர். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொம்மிடி பகுதியில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனால் பொம்மிடி வட்டாரப் பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இதையடுத்து, காவல் துறை சார்பில் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் அச்சிட்டு பொதுமக்களிடம் வழங்கினர். அதில் வணிக நிறுவனங்கள், வங்கிகள், கோயில்கள், கடைகள், வீடுகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் தனியார் காவலர்களை நியமிக்க வேண்டும். வெளியூர் செல்வோர் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் மற்றும் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விவரங்கள் அடங்கியிருந்தன.மேலும், திருட்டு சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் 04346 244460 என்ற தொலைபேசி எண் மூலம் பொம்மிடி காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.