தருமபுரி, நவ.9- விவசாயிகளுக்குத் தேவையான இடு பொருள்களான விதை, உரம், பூச்சிக் கொல்லி மருந்துகள் விவசாயத்துறையின் மூலம் மானிய விலையில் வழங்க நடவ டிக்கை எடுக்கவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட்கட்சியின் தருமபுரி மாவட்டச் செயலாளர் ஏ.குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, சமீபத்தில் தருமபுரி மாவட்டத்தில் பெய்து மழையைத் தொடர்ந்து பரவ லாக விவசாயம் தொடங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்குத் தேவையான இடுபொருள்களான விதை, உரம், பூச்சிக் கொல்லி மருந்துகள் விவசாயத் துறையின் மூலம் மானிய விலையில் தாராள மாகக் கிடைக்க வகை செய்ய வேண்டும். அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளிலும், கூட்டுறவு வங்கிகளிலும் தாராள கடன் வழங்க வேண்டும். சமீபத்தில் நடைபெற்ற மருத்துவர் களின் போராட்டத்தை ஒட்டி மாவட் டத்தில் சில மருத்துவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 17 பி குறிப்பாணை அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இத் தகைய பழிவாங்கும் போக்கைக் கைவிட்டு, மருத்துவர்களின் இடமாற்றத்தை ரத்து செய்து ஏற்கெனவே பணியாற்றிய இடங் களிலேயே அவர்களைப் பணியமர்த்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. தமிழகத்தில் உயர்மின் கோபுரம் அமைப் பதற்காக வேளாண் விளை நிலங்களைக் கையகப்படுத்தப்படுகின்றன. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக் கப்படும். அரசு இம்முயற்சியைக் கைவிடப் வேண்டுமென வலியுறுத்தி பாதிக்க பட்ட விவசாயிகள் வருகிற 18ஆம் தேதி யன்று போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். எனவே விளைநிலங்களில் உயர்மின் கோபுரம் அமைப்பதைக் கைவிட்டு கேபிள் மூலம் மின்சாரத்தைக் கொண்டு செல்வதற்கான திட்டத்தைச் செயல்படுத்த வேண்டுமென அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.