tamilnadu

img

சைக்கிளில் சென்ற மாணவன் ஹெல்மெட் அணியாததால் அபராதம்: காவல்துறையினரின் அட்டூழியம்

பென்னாகரம் அருகே சைக்கிளில் சென்ற சிறுவன் ஹெல்மெட் அணியாததால் அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

புதிய மோட்டார் வாகனச்சட்டம் நடைமுறை படுத்தப்பட்டதில் இருந்து காவல்துறையினர் போக்குவரத்து விதிகளை நெறிப்படுத்துவதில் கெடுபிடி காட்டி வருகின்றனர். இந்நிலையில் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஏரியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட பகுதியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சுப்ரமணி தலைமையிலான காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக வந்த  ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களை தடுத்து நிறுத்தி ஆவணங்களை சோதனை யிட்டனர். அப்போது அந்த வழியாக பள்ளி மாணவன் சைக்கிளில் சென்று கொண்டிருந்தான். அந்த மாணவனை  தடுத்து நிறுத்திய உதவி காவல் ஆய்வாளர் தடுத்து நிறுத்தி சைக்கிளுக்கு  பறிமுதல் செய்தார்.  இதையடுத்து சிறுவனிடம் ஹெல்மெட் அணியாததால் அபராதம் செலுத்த சொன்னதாக கூறப்படுகிறது. இதனால் குழம்பிய சிறுவன் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து 1 மணி நேரமாக காத்திருந்த காவலர்கள்  சைக்கிளையும் மாணவனையும் விடுவித்தனர் இச்சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.