சென்னை,அக்.26- தென்மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உரு வாகியுள்ளதால் தென் தமிழகம், புதுவை மற்றும் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர் களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியர சன், “தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உரு வாகியுள்ளது என்றும், அடுத்த நான்கு நாட்களில் அது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகரக் கூடும். அதன் காரணமாக தென் தமி ழகம், புதுவை மற்றும் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்” என்றார்.
சூறைக்காற்று
அரபிக்கடல் மற்றும் குமரிக் கடல் பகுதியில் தொடர்ந்து வீசி வரும் சூறைக்காற்றினால், கன்னி யாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மீன வர்கள் தொடர்ந்து 7வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வில்லை. வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து குமரி மாவட்ட கடல் பகுதியில் சூறைக் காற்றுடன் கூடிய கனமழை பெய்த தால், குமரி மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வில்லை. இந்நிலையில் அரபிக்கடல் பகுதியில் உருவாகி உள்ள ‘கியார்’ புயலால், மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் பாது காப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் 7வது நாளாக குளச்சல்,முட்டம் துறைமுகங்களை சேர்ந்த மீன வர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் வருவாய் இல்லாமல் தவிப்பதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.