tamilnadu

img

வீதிகள் அதிரட்டும்! விடுதலை பிறக்கட்டும்!

தாயின் கண்ணெதிரில் தலையை துண்டித்து கொலைகாரனே கையில் எடுத்துச்செல்ல, தலை யற்ற உடலும் கை, கால்களும் துடிதுடிக்க மாண்டுபோன ஆத்தூர் சிறுமி ராஜலட்சுமி யின் குரல்... காஷ்மீரில் கோவில் கருவறைக்குள்ளேயே இந்துத்துவ மத வெறியர்களால் கும்பல் வல்லுறவு செய்யப்பட்டு கொலையுண்ட ஆஷிபாவின் குரல்...  காதலிக்க மறுத்ததால் பட்டப்பகலில் படு கொலை செய்யப்பட்ட சுவாதியின் குரல்... சாதிய ஆதிக்க வன்மத்தால் வல்லுறவு செய்யப்பட்டு கருப்பை கிழிக்கப்பட்டு கிணற்றில் வீசி எறியப்பட்ட தலித் குழந்தை அரியலூர் நந்தினியின் குரல் ... பணபலத்தாலும்,அதிகாரபலத்தாலும் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்ட பொள்ளாச்சி இளம் பெண்களின் குரல்.. இப்படி, திரும்பும் திசையெங்கும் வன்முறைக்கு உள்ளாக் கப்படும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் கதறல் குரல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு பெண்ணின் மரணத்திற்குப் பின்னும் விவா திக்கப்படும் விஷயங்கள் மரணத்தின் வேதனையை விட பயங்கரமானது. இப்படுகொலைகள் பெண்களின் ஒழுக்கத்தை மையமாக வைத்தே விவாதப் பொருளாக மாற்றப்படுகிறது. நீதிக்கான போராட்டத்தை வலுவிழக்கச் செய்கிறது. படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தை உளவியல் ரீதியாக மீண்டும் மீண்டும் படுகொலை செய்கிறது. ஒரு ஆண் கொலை செய்யப்பட்டால் பணம், கடன், தொழில் பிரச்சனை என சிந்திக்கும் சமூகத்தின் பொதுப் புத்தி, பெண் படுகொலை செய்யப்பட்டால் என்ன ஒழுக்கக்கேடோ என்று  எடுத்த எடுப்பிலேயே ஒரு முத்திரையைப் பதித்து விடும் கொடூரத்தை எப்போது நாம் மாற்றப் போகிறோம்? வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் பல ஆயிரம் கண்கள் பெண்களை கண்காணித்துக் கொண்டே இருக்கின்றன. பெண் உடுத்தியிருக்கும் உடை, அவளது பயணம், அவளது விருப்பங்கள் -சுருங்கச் சொன்னால் அவளது ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின் றது. ஆனால் பெண்கள் மீது வன்முறையைப் பிர யோகிக்கும் குற்றவாளிகளின் வெளியைப் பற்றியோ, அவர்களின் உடையைப் பற்றியோ அவர்களின் ஒழுக்கத் தைப் பற்றியோ நாம் பேச மறுக்கிறோம்.

குழந்தைகள் மீதான வன்முறைகள் 
80 சதம் குழந்தைகள் இந்தியாவில் ஏதாவது ஒரு வகை யில் பாலியல் சீண்டல் செய்யப்படுவதாக புள்ளி விவரம் ஒன்று கூறுகிறது.2017 ல் இந்தியாவில் 1,29,632 குற்றங்கள் குழந்தைகளுக்கு எதிராக நடந்துள்ளன. அதிலும் குறிப்பாக 90 சதம் குழந்தைகள் குடும்ப உறுப்பி னர்களால் அல்லது நன்கு அறிந்தவர்களால் தான் பாலியல் சீண்டல் செய்யப்படுகிறார்கள் என்கிறது அரசு தரும் விவ ரம். காலம் காலமாக குழந்தைகள் மீதான வன்முறையை தடுக்க குழந்தைகளுக்கு பல அறிவுரைகள் கூறப்படு கின்றன. தற்காப்புக் கலைகளை கற்றுக் கொள். “குட் டச், பேட் டச்” பற்றி தெரிந்து கொள். வீட்டை விட்டு வெளியே சென்று விளையாடாதே. தெரியாதவர்கள் பேச்சு கொடுத்தால் பேசாதே- இப்படி குழந்தைகளுக்கு மட்டுமே அறிவுரைகளை அள்ளி கொடுக்கின்றார்கள். குழந்தை களுக்கு குட் டச். பேட் டச் பற்றி சொல்லிக் கொடுக்கும் இவர்கள் குழந்தைகளை பாலியல் சீண்டல் செய்பவர் களைப் பார்த்து “டோன்ட் டச்” என்று உரக்கச் சொல்ல மறுக்கிறார்கள்.

சாதியும் பெண்களும் 
இந்தியாவில் 10 சதம் அளவிற்கு சாதி மறுப்புக் காதல் திரு மணங்கள் நடைபெறுகின்றன. அதுவும் கூட தமி ழகத்தில் இல்லை. வெறும் 2.7 சதம் அளவிற்கே சாதி மறுப்பு திருமணங்கள் நடைபெறுவதாக விபரங்கள் தெரி விக்கின்றன. இதற்கே இவ்வளவு கடுமையான எதிர்ப்பு. சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்கிறவர்கள் மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பிற்படுத்தப்பட்டவர்களுக்குள்ளேயே மற்றொரு பிரிவினரை காதலித்ததால் பேத்தியின் கழுத்தை அறுத்து படுகொலை செய்த தாத்தா என்கிற கடலூர் கொடூரம்; நெல்லையில் தன் சகோதரி வேறு சாதி இளைஞனை காதலித்தால் தன் நண்பர்கள் தன்னைக் கேலி செய்கிறார்கள் என்று தன் சகோதரியின் காதலனை படுகொலை செய்த 14 வயது சிறுவன்; தூத்துக்குடி விளாத்திகுளத்தில் பட்டியல் சமூகத்தின் இரு பிரிவைச் சேர்ந்த ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண் டார்கள் என்பதற்காக இருவரையுமே படுகொலை செய்த பெண்ணின் தந்தை; தமிழகத்தையே உலுக்கிய நந்தீஸ் - சுவாதி பயங்கரப் படுகொலை. இவையனைத்தும் தெரி விக்கிற செய்தி என்ன? பெண், அவள் தான் சாதியின் பெரு மையை பாதுகாக்க வேண்டும் என்ற மநு அதர்மத்தின் செயல் வடிவம் தானே! இன்னும் சாதியத்தின் சம்பிரதாய சடங்குகள் அனைத்தும் பெண்களை மையப்படுத்தியே கட்டமைப்பு செய்யப் பட்டுள்ளன.

குடும்ப வன்முறைகள் 
திருமண உறவு பெண்களுக்கு பாதுகாப்பைத் தருகின்றதா என்ற கேள்விக்கு ஆம் என உவப்பாக பதில் சொல்ல முடியவில்லை. வீடுகள் பெண்களுக்கு அபாயகரமான இடமாக உள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள 2017 அறிக்கை யில் மூன்றிலொரு பகுதி பெண்கள் கணவனால் குடும்ப வன்முறைக்கு உள்ளாக்கப்படுவதாகவும் குடும்ப வன்முறை அதிகம் நடக்கும் நாடுகளில் இந்தியா முத லிடத்தில் இருப்பதாகவும் கூறுகிறது.  கலாச்சாரம் என்ற பெயரில் அரசும் ஏன் நீதிமன்றமும் கூட குடும்பத்திற்குள் நடக்கும் வன்முறைகளை, வன்முறை அல்ல என்றே வாதிடுகின்றன. நான்கு சுவருக்குள் நடக்கும் குடும்ப பிரச்சனைகளை நீதிமன்றம் வரை கொண்டு செல்ல வேண்டியதில்லை என்ற வாதங்கள் நாடாளுமன்றத்தி லேயே நடந்துள்ளன. கணவன், மனைவியை எப்போதா வது அடித்தால் அது வன்முறையல்ல; தினம் தினம் அடித்தால் தான் அது குடும்ப வன்முறை என பாரதிய ஜனதா கட்சி எம்பிக்கள் வாதிட்டனர். இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவுகள் 14 ,15 ,21 ஆகியவை சமத்துவத்திற்கான உரி மையையும் கண்ணியமாக வாழ்வ தற்கான உரிமையையும் உறுதி செய்திருக்கின் றன. ஆனால் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பெண் களுக்கான உரிமை பறிப்பு குடும்பம் என்ற பெயரால் நிகழ்த்தப்பட்டாலும் அது குற்றம் தானே. குடும்ப வன்முறை ஆணின் உரிமையாக கருதப்படுவதை அனு மதிக்கக் கூடாது.

போதையின் பாதை
இத்தகைய வன்முறைகளுக்கு போதைப் பழக்கம் மிக முக்கியமான காரணமாக அமை கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போதைக்கு அடிமையானவர்களில் 87 சதம் பேர் படித்தவர்கள். 75 சதம் பேர் இளை ஞர்கள். இளம் வயதில் இத்தகைய போதை பழக்க வழக்கத்திற்கு இவர்களைத் தள்ளியது யார்? அரசு கள் அல்லவா? தமிழகம் மற்றும் புதுச்சேரியில் குடியினால் கணவனை இழந்த இளம் விதவைகள் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. போதையினால் சாலை விபத்துகள் அதி கம் நடைபெறும் மாநிலங்களில் தமிழகமும் முதன்மை வகிக்கின்றது. 2019-20 தமிழக நிதிநிலை அறிக்கையின் போது சட்ட மன்றத்தில் உரையாற்றிய துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள், தமிழகத்தில் இக்காலத்தில் 2698 டாஸ்மார்க் கடைகள் மூடப்பட்டதாக கூறியுள்ளார். ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு ஜனநாயக அமைப்புகளுக்கு கிடைத்த வெற்றியே இது. ஆனாலும் இந்த எண்ணிக்கை தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகள் - மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணி க்கையை விட அதிகம் என்பது கவனிக்கத்தக்கது. அதேவேளையில் 2018-19 டாஸ்மார்க் வருமானம் 6,724.38 கோடியாக இருந்தது, 2019-20 ல் அது 7,262.34கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அவரே குறிப் பிட்டுள்ளார். கடைகளை குறைத்தாலும் விற்பனையை அதிகரிப்போம் என்கிற அரசின் பொறுப்பற்ற தன்மை யைத் தவிர இதில் வேறு ஒன்றையும் பார்க்க முடிய வில்லை. புதுச்சேரி அரசை பொறுத்தவரை அது வேறு விதமான விளக்கத்தை கொடுக்கிறது. இது பிரெஞ்சு கலாச்சாரத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட மாநிலம்; எனவே இந்த மாநிலத்தில் மது போதை குறித்து கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது என்கிறது. தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் அரசு இலக்கு வைத்து மதுபான விற்பனை செய்வது எந்த வகையிலானது? போதை மற்றும் பெண்கள் மீதான வன்முறைகள் குறித்த ஒரு உரையாடலை தமிழ்ச் சமூகத்தோடு நடத்த வேண்டிய சூழல் இது. எனவேதான் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் தமிழகம் மற்றும் புதுவையில் நவம்பர் 25 சர்வதேச வன்முறை எதிர்ப்பு தினத்தில் தமிழகத்தின் இரு மையங்களில் துவங்கி டிசம்பர் 4 ம் தேதி சென்னை யில் நிறைவடையும் விதத்தில்10 நாட்கள் மாபெரும் நடை பயணம் நடைபெறுகிறது. பிரச்சனைகளைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருப்ப தல்ல, தீர்வை நோக்கி நகர வேண்டிய காலகட்டம் இது. எனவே சமூகத்தில் மக்களோடு ஒரு பரந்த உரையாடலை இந்த நடைபயணத்தின் மூலமாக நடத்த திட்டமிட்டுள்ளோம்.

இரு குழுக்கள், 400 கி.மீட்டர்
திருவண்ணாமலை நகரில் துவங்கி சென்னை வரையிலும், வடலூர் நகரில் துவங்கி சென்னை வரையிலும் இரண்டு குழுக்கள் 400 கிலோ மீட்டர் தூரம் மக்களை சந்தித்து உரையாட உள்ளன. வன்முறைகளை எதிர்கொண்டு உயிர் நீத்தபெண்களின் குடும்பத்தினரும், நீதிக்கான போராட்டத்தில் கரம் இணைத்துள்ள மாதர்களும், அவர்களின் குடும்பத்தின ரும் நடைபயணத்தில் நம்முடன் பங்கேற்கிறார்கள். தமிழ கம் மற்றும் புதுச்சேரி அரசுகளிடம் உறுதியான கோரிக்கை களையும் முன் வைக்கிறோம். திருவண்ணாமலையில் துவங்கும் நடைபயணத்திற்கு மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா தலைமை ஏற்கிறார். துடியலூரில் கும்பல் வல்லுறவு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 6 வயது குழந்தையின் தாயார் வனிதா துவக்கி வைக்கிறார். வடலூரில் மாநில பொதுச்செயலாளர் பி.சுகந்தி தலைமை யில் நடைபயணம் புறப்படுகிறது. சாதி மற்றும் மதவெறி யர்களால் அரியலூரில் கூட்டு பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட அரியலூர் நந்தினியின் சகோதரி சிவரஞ்சனி இவர்கள் வடலூர் நடை பயணத்தை துவக்கி வைக்கிறார். இக்காலத்தில் குடும்ப வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட வர்கள், பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள், காதலிக்க மறுத்ததால் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தார், நீதிக்காக போராடிக் கொண்டிருக்கின்ற பெண்களும் அவர்களின் குடும்பத்தாரும், மாதர் இயக்கத்தின் மகத்துவம் மிக்க போராளிகளும் நடை பயணத்தில் கலந்து கொள்கின்றார்கள். நடைபயணத்தில் பல்வேறு பெண்கள் அமைப்புகளின் தலைவர்கள், பெண்ணிய செயல்பாட்டாளர்கள்,மனித உரிமை ஆர்வலர்கள் கலந்து கொள்கின்றார்கள் அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய தலை வர்கள் சுதா சுந்தரராமன், உ.வாசுகி, முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் கே.பாலபாரதி உள்ளிட்ட தலை வர்களும் மேனாள் நீதியரசர் கே.சந்துரு, முனைவர் வே. வசந்திதேவி, மருத்துவர் ஜெயராணி காமராஜ், வழக்கறி ஞர்கள் ஆர்.வைகை, அருள்மொழி, ஓவியா, அஜிதா, திரை இயக்குநர்கள் லெனின் பாரதி, ராஜூ முருகன், எழுத்தாளர்கள் ச.தமிழ்ச்செல்வன், ஆதவன்  தீட்சண்யா மற்றும் எண்ணற்ற செயல்பாட்டாளர் இந்த நடை ணபயணத்தில் எங்களோடு கரம் இணைக்கிறார்கள்.  டிசம்பர் 3ஆம் தேதி மாலை ஏழு மணிக்கு தாம்பரத்தில் நடை பெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் விடுதலைப் போராட்ட வீரர் ஆர்.நல்லகண்ணு உள்பட தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

ஆதரவு தாருங்கள்
போதையற்ற தமிழகம், போதையற்ற புதுச்சேரி, வன்முறை யற்ற தமிழகம், வன்முறையற்ற புதுச்சேரி என்ற முழக்கத்தோடு அணிவகுக்கின்றன புதுமைப்பெண்களின் கால்கள்.அனைவரும் எங்களோடு இணையுங்கள்.  நடக்க வாய்புள்ளவர்கள் உடன் வாருங்கள்.உடன் வர வாய்ப்பற்றவர்கள் சமூக ஊடகங்களின் வழியாக முன் நடந்து செல்வீர். நடைபயணம் துவங்கும் அன்று உங்கள் முகநூல் பதிவுகளில் #march4womenrights என்பதையும் பதிவு செய்து மாதர்களின் எழுச்சிக்கு மகத்தான ஆதரவை தாருங்கள்.