கொரோனாவின் கோரத் தாண்ட வத்தால் அந்நோயால் பாதிக்கப்பட்ட வர்களை விட அதற்காக அறிவிக் கப்பட்ட பொதுமுடக்கத்தால் வாழ் வாதாரம் இழந்து நிற்பவர்களே அதிகம். இவ்வாறு பாதிக்கப்பட்ட வர்கள் அன்றாட உணவிற்கே பெரும் இன்னல்பட்டு வரும் நிலை யில், வீட்டிலுள்ள பெண்களுக்கு மிக அவசியமாக தேவைப்படும் நாப்கின்களைப் பற்றி எவரும் நினைத்திருக்க மாட்டார்கள். இத னால் வீட்டின் பொருளாதார நிலை கருதி வீட்டுப் பெண்களும் துணியை உபயோகித்தோ அல் லது வேறு ஏதாவது செய்தோ மாத விடாய் காலங்களை நாப்கின்கள் இன்றி கடந்து வருகின்றனர். இத்தகைய சூழலில் பெண்க ளின் இந்நிலையை கருத்தில் கொண்டு நாப்கின்களை தயாரிக் கும் ஒரு நிறுவனம், இக்கொரோனா காலத்தில் அதனை இலவசமாக வழங்க ஆரம்பித்துள்ளது. இதுவரை சுமார் 3 ஆயிரம் நாப்கின் தொகுப்பு பாக்கெட்டுகளை வழங்கியுள்ளதாக கூறுகிறார் கோவை சிங்காநல்லூரில் “ப்ளிஸ்” (Bliss) என்னும் பெயரில் புளிச்ச கீரையைக் கொண்டு நாப்கின்களை தயாரிக்கும் நிறுவனத்தின் இயக்கு நர்களில் ஒருவரான நிவேதா, மேலும், மொத்தம் 12 ஆயிரத்து 500 நாப்கின் பேக்கெட்டுகள் வழங்குவதே எங்களின் குறிக் கோள் என்றும் குறிப்பிடுகிறார்.
இதுகுறித்து அவரிடம் தொடர்ந்து பேசுகையில், கோவை யில் பேசன் டெக்னாலஜி படித்துக் கொண்டிருந்தபோது, 2018 ஆம் ஆண்டு இறுதி செய்முறைத் தேர் விற்காக இதனை நாங்கள் பரிந்து ரைத்தோம். அதாவது, புளிச்சகீரை யின் நாருக்கு எளிதில் உரியும் தன்மை அதீதமாக இருப்பதால் அதில் நாப்கின்கள் தயாரித்தால் சுற்றுச்சூழலுக்கும், பயன்படுத்து வோருக்கும் அதிக பாதிப்புகள் இல்லாமல் இருக்கும் என்பதை உணர்ந்தோம். அதன் அடிப்படையில் நானும், எங்கள் நிறுவனத்தின் மற்றொரு இயக்குநரான கௌதமும் இத னைத் தயாரித்து வழங்க ஆரம் பித்தோம். இதற்காக 3 தேசிய விருதுகள் உட்பட பல விருதுகளை நாங்கள் பெற்றுள்ளோம். இரு வருடங்களுக்கும் மேலாக இவ்வாறு சிறிய அளவில் தயாரித்து நாங்கள் விற்பனை செய்து வருகிறோம். கொரோனா பொதுமுடக்கம் ஆரம்பிக்கப்பட்ட சில நாட்களில் தில்லியில் இருந்து நன்கொடை அளிப்பதற்காக நாப்கின்கள் ஆர்டர்கள் வந்தது. அப்போது கிட்ட தட்ட ஆயிரத்து 500 நாப்கின்கள் வரை இலவசமாக உற்பத்தி செய்து அனுப்பினோம். இதைத்தொடர்ந்து மேலும்சில தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர் கேட்டனர்.
இதன் பின்னர், நம் ஊரிலேயே நிறைய கிராமங்களில் இதன் தேவை அதிகம் இருப்பதை நாங்கள் உணர்ந்தோம். இதையடுத்து நாங்கள் 25பேர் சேர்ந்து (அனை வரும் கல்லூரி மாணவர்கள்) நாப்கின்கள் தேவைப்படும் இடங்களுக்கு சென்று இலவசமாக கொடுக்க முன்வந்தோம். ஆனால், தமிழகத்தில் குறிப் பாக கிராமப்புறங்களில் இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாததால் நாங்கள் அப்பகுதிகளை தேர்ந் தெடுத்து சென்றோம். ஆன்லை னில் நிதி திரட்டி அன்னூரைச் சுற்றி யுள்ள 6 கிராமங்களில் முதல் கட்டமாக 10 ஆயிரத்திற்கும் மேற் பட்ட நாப்கின்களை வழங்கினோம். பின்னர் பொள்ளாச்சி, சித்தாபுதூர் போன்ற இடங்களில் கொடுத்து வருகிறோம். இதில் ஈடுபடும் தன் னார்வலர்களுக்கும் தேவையான அனைத்து பாதுகாப்பு உபகர ணங்களையும் நாங்களே வழங்கி விடுவோம். சுமார் 70 ரூபாய்க்கு விற்கும் நாப்கின்களைத் தான் தற்போது நாங்கள் நன்கொடையாக கொடுத்து வருகிறோம். ரூ.5 லட்சம் நிதியினை இலக்கு வைத்து 75 ஆயிரம் நாப்கின்கள் அடங்கிய 12 ஆயிரத்து 500 நாப்கின் தொகுப்புப் பாக்கெட்டுகளை வழங்குவது தான் எங்கள் தற்போதைய இலக்காகும்.
தற்போதுவரை அதில் ஒரு 30 சதம் முடித்துள்ளோம் என்கிறார். மேலும், நிறைய தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் எங்களை அணுகி வருகிறபோதும், அவை உண்மையான பயனாளிகளுக்கு சென்றடையுமா என்ற சந்தேகம் இருப்பதால் பலமுறை நாங்கள் ஆய்வுக்கு உட்படுத்திதான் நன் கொடையாக நாப்கின்களை வழங் குகிறோம். இதேபோல், எங்களின் ஒரு குழுவினர் வறுமைக் கோட்டிற் குக் கீழ் வசிக்கும் மக்கள் இருக்கும் ஒரு பகுதிக்கு சென்று உரிய ஆய்வு செய்த பின்னரே அப்பகுதிப்பெண் களின் தேவையறிந்து இலவச நாப்கின்களை வழங்கி வருகிறோம். இந்தியாவில் முன்னர் நாப்கின்கள் பயன்படுத்துவோர் விகிதம் 12 சத விகிதமாக இருந்தது. பின்னர் அது படிப்படியாக அதிகரித்து 38 சதம் வரை உயர்ந்தது. ஆனால், தற் போது கொரோனா காலத்தில் அது மீண்டும் குறைந்து வருகிறது. ஏனெனில் நாப்கின்கள் நிச்சயமாக வாங்க வேண்டும் என்ற எண்ணமே நம் வீட்டு செலவுப் பட்டியலிலிருந்து மறைந்து வருகிறது. இதனால் மீண்டும் துணியைத் தான் உபயோகிக்க வேண்டும் என்ற நிலைக்கு பெண்களைத் தள்ளுவது என்பது மிக அவலமான நிலையே அன்றி வேறல்ல.
இதுதவிர பெண்களின் மாத விடாய் காலத்தைத் தீட்டு என்று பெயரிட்டு அழைப்பதே மிகவும் தவறான ஒன்றாகும். தற்போதைய நவீன காலத்தில் அவர்களுக்கான தேவையைத் தான் நாம் பூர்த்தி செய்து தர வேண்டுமே தவிர, இன் னமும் பழைய காலத்திலேயே இருப்பது உண்மையான முன் னேற்றமல்ல. எனவேதான் ஆண், பெண் வேறுபாடு எல்லாம் இல் லாமல் எங்கள் குழுவில் எவ்வித கூச்சமின்றி பெரும்பாலான ஆண் கள் மிக ஆர்வத்துடன் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தீட்டு என்னும் மூட நம்பிக்கையில் மூழ்கிக் கிடப்பதிலிருந்து நம் தமிழ்ச் சமூகம் தாமாக வெளியே வர வேண்டும். அதில் இளைஞர்களின் பங்கு நிச்சயம் இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை, இவ்வாறு கூறுகிறார் நிவேதா.
-சந்திப்பு: ச.காவியா