புவனேஸ்வரம், மே 29-ஒடிசா மாநில முதலமைச்ச ராக தொடர்ந்து ஐந்தாவது முறையாக, நவீன் பட்நாயக் புதனன்று பதவியேற்றுக் கொண்டார்.சட்டப்பேரவை தேர்தலில் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம், மொத்தமுள்ள 146 சட்டமன்ற தொகுதிகளில், 112 இடங்களை கைப்பற்றி, ஆட்சியைத் தக்க வைத்தது. இதன் மூலம் தொடர்ந்து ஐந்தாவது முறையாக ஒடிசா மாநில முதலமைச்சராக நவீன் பட்நாயக், பிஜு ஜனதாதள உறுப்பினர்களால் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இந்நிலையில் புதனன்று புவனேஷ்வரத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் நவீன் பட்நாயக் பதவியேற்றார். நவீன் பட்நாயக்குடன் அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.